உலகிலுள்ள யாவரும்
உன்னை வெறுக்கையில்
நிலை மாறா நட்போடு
நேசித்தல் நட்பாகும்.
பல்வேறு கதைகள் உண்டு
புராண காலம் முதல்
சில துளிகள் சொல்லுதற்கே
செலவாகும் வாழ்நாட்கள்.
கோப்பெருஞ் சோழனவன்
கண்டதில்லை கேட்டலினால்
பாப்புணைந்த பெரும் புலவர்
பிசிராந்தை நட்பு கொண்டான்.
தப்பாய் பிறந்திட்ட
தமையன்கள் செயல்களினால்
மூப்படையும் முன்னரே
உயிர்துறக்க முடிதுறந்து
வடக்கிருக்க தேவையான
வசதிகளை செய்கையில்
இடம் ஒன்றை வைத்திடவே
உடனிருந்தோர் கேட்டிட்டான்.
மடல் வழியே பேசியும்
மற்றோர் சொல்வதிலும்
நட்பது என்பதனை
நன்றுணர்ந்த உடனிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்
அரசனது ஆஞ்சையினால்
ஆனாலும் வினா புதைத்து
வினவியதை செய்திட்டர்.
கணம் சிறிது ஆனவுடன்
கவலை சூழ் முகத்துடனே
மனம் கலங்கி புலவரவர்
மன்னனிடம் வந்து சேர
என்ன இது விந்தையென
எல்லோரும் வியப்பு கொள்ள
கண்டிட்ட மகிழ்ச்சியினில்
கவலைகளை மறந்து பேசி
இன்னுயிரை நீத்தார்கள்
இனிய இரு நண்பர்கள்
உண்மையான நட்பென்றால்
உயிர் முடிவு தொடர்ந்துவரும்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
3 days ago
0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
Post a Comment