குரு வணக்கம்...

|

ஆசிரியர் தினம் னா நினைவுக்கு வரது என்னோட குருமூர்த்தி சார், அவரப்பத்தின நினைவுங்கதான்... சின்ன வயசுல என் மனசில அழுத்தமா உக்காந்தவரு, இன்னும் இருக்காரு. முன்னால எழுதின இத இன்னிக்கு பகிர்ந்துக்கனும்னு தோனுச்சி... அதான்...
******************************************************************************

பொறந்தது எழுபத்திரண்டு கடைசின்னாலும் சர்ட்டிபிகேட்ல ஆறாவது மாசம்னு கொடுத்ததால நாலரை வயசிலேயே ஒன்னாவது சேக்க கூட்டிட்டு போனாங்க.

காதுல கையை வெக்க சொல்லி எட்டாததால 'என்ன ராமசாமி பையனுக்கு இன்னும் வயசாகல போலிருக்கு' ன்னாரு கந்தசாமி சார்.

'சார் அ ஆ முழுசும் தெரியும், ஏ,பி,சி,டி எல்லாத்தையும் சொல்லுவேன், இ போடுவேன்' னு சொல்லிட்டு தட்டில இருந்த நெல்லுல விரலால இ போட்டேன்.

ஏன்னா எனக்கு அப்போ சுத்தி சுத்தி இ போடறது அவ்வளோ கஷ்டமா இருந்துச்சி. மூனு நாள் எடுத்துகிட்டேன்.

'அட பையன் பரவால்லயே, சுட்டியா இருக்கான்' னுட்டு சேத்துட்டு,

'குருமூர்த்தி இங்க வாங்க, ராமசாமி பையனை கூட்டிட்டு போங்க' ன்னு சொல்ல, என்ன கைய புடிச்சி மெதுவா கூட்டிட்டு போகும் போதுதான் அவர மொத தடவையா பாத்தேன், குள்ளமா சிரிச்ச முகத்தோட இருந்தாரு.

சட்டுனு கேட்டேன், 'சார் உங்க மேல எதோ வாசம் அடிக்குது'

'அதெல்லாம் ஒன்னுமில்ல வா' ன்னு கூட்டிட்டு போயி, மொத வரிசையில இருந்த ஒரு பையனை பின்னால போகசொல்லிட்டு உக்கார வெச்சாரு.

எல்லாத்தையும் வாடா போடான்னு சொன்னாலும் என்ன வாங்க போங்கன்னுதான் சொல்லுவாரு.

அப்பவோட டிரைனிங்ல முன்னாலயே அ, ஆ ஏ, பி.சி, எனக்கு தெரியும்ங்றதால என்ன சத்தம் போட்டு சொல்லி கொடுக்க சொல்லி பாத்துட்டு இருப்பாரு.

மொத நாளு அவரு மேல அடிச்ச வாசம் சுருட்டு வாசம்னு அப்புறமா தான் தெரிஞ்சது.

சுருட்டு வாசம், அதால ஆன காவி பல்லோட சிரிப்பு அதான் அவரோட அடையாளம்.

தப்பு பண்ணி, சத்தம் போட்டுட்டு இருந்தா குச்சால வெளுப்பாரு.

நான் அந்த குரூப்புல இருந்தாலும் நீ போயி அங்க உக்காரு, நல்ல பையன்னு அடிக்காம விட்டுடுவாரு.

வேலு 'சார் அவனும் தான் கத்துனான்' னு போட்டு கொடுத்தாலும், அவனுக்குத்தான் ரெண்டு அடி சேத்து விழும்.

சாதாரணமா அட்வைஸ் பண்ணுவாரு. 'பெரிய ஆளா வரனும், அப்பாவோட பேர காப்பத்தனும்' னு அடிக்கடி சொல்லுவாரு.

இன்டர்வல் சமயத்துல எல்லாரும் அவரு ஸ்கூலுக்கு வெளியே குப்பு குப்புன்னு சுருட்டு புடிக்கறத ஒளிஞ்சி, ஆசையா பாத்து கிட்டு இருப்போம். பாத்துட்டார்னா குச்செடுத்துகிட்டு துரத்துவாரு.

ஒருநாள் என்ன பாத்துட்டு 'நீயெல்லாம் அவ்னுங்களோட சேராத கெட்ட பசங்க' ன்னு சொன்னாரு.

கடைசி வரைக்கும் மூனு வகுப்புக்கு மேல் பாடம் நடத்துனதில்ல. நாங்க அவருக்கு வெச்ச பேரு ரயிலு வண்டி, பள்ளி கூடத்த தவிர புகையை விட்டுகிட்டே போறதால.

காது அவருக்கு கொஞ்சம் மந்தம், சத்தமாதான் பேசுவாரு, பேசனும்.எங்களுக்கு அப்புறம் வந்த பசங்கள்ளாம் எங்க அளவுக்கு அவருக்கு மர்யாதை தர்றதுல்ல. அவரும் பெருசா எதிர்பாக்க மாட்டாரு.

அவர எங்க பாத்தாலும் வணக்கம் சொல்லி முழங்காலை தொட்டு கும்பிடுவேன் பதறி போயி, தோள புடிச்சி தூக்கி 'என்ன இதெல்லாம்' னு சொல்லுவாரு.

அடிக்கடி ஒன்னே ஒன்னு சொல்லுவாரு. 'யாரும் உங்க செட்டு மாதிரி இல்ல, உங்கள மாதிரி பணிவா இல்ல' ன்னு.

டெல்லியில வேலை பாத்துகிட்டிருக்கும்போதுதான் கல்யாணம். லீவ் இல்லாததால கடைசி நேரத்துல தான் வந்தேன். கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து ஹால்ல பேசிகிட்டு இருந்தோம்.

ஆயா வந்து என்ன பாக்கறதுக்கு குருமூர்த்தி சார் வந்திருக்கறதா சொன்னுச்சி. வேளியே போனேன்.

தயங்கி தயங்கி நின்னுகிட்டிருந்தாரு. கையை புடிச்சி உள்ளே கூட்டிட்டு வந்தேன்.

'பிரபு, ஒங்களுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன், பத்திரிகை வெக்க மறந்துட்டாங்க போலிருக்கு, அதான் நேர்ல பாத்து ஆசிர்வதிச்சுட்டு போலாம்னு வந்தேன்'னு சொன்னாரு.

அப்படியே அவரை கட்டி புடிச்சி அழுதுட்டேன்.

'மன்னிச்சுங்க சார், வெச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்' ன்னேன். அவரோட சுருட்டு வாசம் கூட ரொம்ப மணமா இருந்துச்சி.

'அய்யய்யோ இதுக்கு ஏன் கலங்குறீங்க' ன்னு கண்ண தொடச்சு விட்டாரு.

ரெண்டு பேரும் ஆசிர்வதம் வாங்கும்போது எனக்கு ஐம்பது ரூபாவும், அபிக்கு இருபது ரூபாவும் வெச்சி வாழ்த்தினாரு.

இன்னைக்கும் அவரு கொடுத்தத பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றேன்.

எங்க தெரு வழியா எப்போ வந்தாலும் நான் இருந்தாலும் இல்லாட்டாலும் வீட்டுக்கு வந்து விசாரிச்சுட்டு போவாரு.

ஒவ்வொரு தடவ ஊருக்கு போகும் போதும் அவரை பாத்து ஆசிர்வாதம் வாங்குவேன்.

சிங்கப்பூர்ல வேலை கிடைச்சு கிளம்பறதுக்கு மொத நாள் பஸ்ஸில பாத்தேன்.

ஏற்கனவே அப்பா மூலமா தெரிஞ்சிருப்பாரு போலிருக்கு. கைய புடிச்சி குலுக்கி வாழ்த்தினாரு.

'எங்க போனாலும் உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க' ன்னு சொல்லிட்டு, 'முடிஞ்சா திரும்பி வரும்போது எனக்கு காதுக்கு ஒரு மெஷின் வாங்கிட்டு வாங்க' ன்னு சொன்ன்னாரு.

பதிவு நீண்டுகிட்டே போகுது. அடுத்ததுல கண்டிப்பா முடிச்சிடறேன்.

இதோட தொடர்ச்சியை இங்க கிளிக் பண்ணி படிச்சிடுங்க...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB