மசாலா கஃபே...கலகலப்பு...

|

சில நேரங்களில் சாப்பிட எண்ணி மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உயர்தர வகையறாக்களுக்கு செல்வோம், ஏனடா சென்றோம் என பல நாட்களுக்கு வருந்துவோம்.

இன்னும் சில நாட்களில் எதிர்பார்ப்பே இல்லாமல் சுமாரான ஓட்டல் என எண்ணி சென்று அசத்தலான சந்தோஷத்தோடு வருவோம்.

கதையாக சொல்லாமல் ஜஸ்ட் என் கருத்து மட்டும்...

சுந்தர் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என தெரிந்து அந்த கண்ணோட்டத்தில் செல்பவர்களுக்கு நிச்சயம் விருந்துதான். அவர்களுக்கு கலகலப்....பூ.

லாஜிக், கதை என இன்ன பிற வகையறாக்களை எண்ணிக்கொண்டு படம் பார்க்க செல்பவர்களுக்கு இது ஒரு கலகல....ப்ப்ப்பூ.

மிகவும் சாதாரண கதை, குழப்பம் இல்லாமல், மூன்று இடங்களில் நிகழ்வதை சொல்லியிருக்கிறார்கள்.

கேமிரா பளீர். இரவு பன்னிரண்டு மணிக்கு நடப்பதாய் சொல்லப்படும் காட்சிகள் எல்லாம் பில்டர் போட்டு பகலில் எடுத்திருக்கிறார்கள் என எண்ணுகிறேன்.

வசனம் குறிப்பிடும்படியாய் இருக்கிறது அண்ணன் கேபிள் அவர்களின் ஒத்துழைப்பில். தனி ஆவர்த்தனம் செய்யும் நாளில் நமக்கெல்லாம் பெரும் விருந்து காத்திருக்கிறது.

சுந்தர் சியின் படத்தில் வரும் எல்லா வழக்கமான பாத்திரங்களும் வருகிறார்கள், தங்கள் கடமையை செய்கிறார்கள்.

மிகக் குறிப்பிடும்படியாய் கலக்கியிருப்பவர்கள் சிவாவும், சந்தானமும்தான்.

அஞ்சலி அழகு. அம்மணி காதலிக்க ஆரம்பித்ததற்குப் பிறகு வேலையை விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது, மசாலா கஃபேவிலேயே இருக்கிறார்.

ஓவியா வரும் காட்சிகள் அம்மா சீக்கிரம் போவியா என ஈர்ப்பில்லாமல் இருக்கிறது.

இரு பாடல்கள், படமாக்கிய விதம் அருமையாய் இருக்கிறது.

கிளைமாக்ஸ் ரொம்பவும் இழுவை, இன்னும் சுவராஸ்யப்படுத்தியிருக்கலாம்.

அண்ணன் கேபிள் சங்கர் பாணியில் சொல்லவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம். 

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB