ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஊருக்கு போயிருந்தப்போ என் தம்பியோட தறியில புதுசா ஒருத்தன் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
பாக்க ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். பேரு என்னான்னு கேட்டதுக்கு, 'கொய்யான்'னு சொன்னங்க.
துருவி கேட்டப்போ உண்மையான பேரை அவன இவன கேட்டு சொன்னாங்க. நம்மை பாத்தானா வேற எங்கேயோ பாக்கற மாதிரி இருக்கும்.
பேருக்கேத்த மாதிரியே, வருவான், வேலை செய்வான். எதைக் கேட்டாலும் சிரிச்சிட்டே பதில் சொல்லுவான். கிறுக்குத்தனமா எதாச்சும் பண்ணிட்டிருப்பான். அவனை எல்லாரும் ஓட்டிகிட்டே இருப்பாங்க.
டேய் பாவம்டா, அவனை ஏன்டா வதைக்கிறிஙன்னதுக்கு,
'அண்ணா இப்போ பாரு அவன்கிட்ட ஒரு கேள்வி கேக்கறேன் என்ன பதில் சொல்றான்னு பாரு' சதீஷ்
'டேய் கொய்யான், கல்யாணம் முடிஞ்ச உடன் என்னா பண்ணுவாங்க'
'ம், பாலும் பழமும் சாப்பிடுவாங்க'
'அதை கேக்கலை, ராத்திரி'
'மாப்பிள்ளை கட்டில்ல உட்காந்திருப்பாரு, பொண்ணு பட்டு பொடவ கட்டி, தலை நிறைய பூ வெச்சி, வளையலெல்லாம் போட்டுகிட்டு சொம்புல பால எடுத்துகிட்டு வரும். கால்ல விழுந்து கும்பிடும்'
'அப்புறம்' சதிஷ் உற்சாகமாய் சிரிப்புடன்.
'கிட்ட போவாங்க, லைட் ஆஃப் ஆயிடும், சினிமாவுல அவ்வளவுதான் பாத்திருக்கேன்' னான்.
எனக்கு அவன் மேல பரிதாபமா இருந்துச்சி.
ஒரு வருஷம் கழிச்சி ஊருக்கு போயிருந்தேன். கொய்யான் வீட்டுக்கு வந்தான். நிறைய மாற்றம். சந்தோஷமா இருந்தான். கல்யாணமாம், பத்திரிகை வைக்க வந்திருந்தான்.
சந்தோஷமா இருந்துச்சி. 'அண்ணா நீங்கதான் ஃபோட்டோ புடிக்கனும், கேமராவோட வந்துடுங்க' ன்னான்.
பொண்ணு குள்ளமா இருந்தாலும் குறை சொல்ல முடியாது. அவனுக்கு பதினேழு, அந்த பொண்ணுக்கு பதினைஞ்சு வயசு. கிராமத்துல இதெல்லம் இன்னமும் ரொம்ப சாதாரணம்.
திரும்ப நான் சிங்கப்பூர் வந்துட்டு ஊருக்கு போனேன். கொய்யான் ரொம்ப சந்தோஷமா வீட்டுக்கு வந்து எல்லாருக்கும் முட்டாய் கொடுத்தான், அவனுக்கு பையன் பொறந்திருக்கிறானாம்.
எனக்கு குழப்பமாயிடுச்சி, போனதடவ வந்தப்போதான் கல்யாணம், சரியா ஏழு மாசம்தான் ஆகுது.
தனியா கூப்பிட்டேன், 'தம்பி, கல்யாணம் ஆகி ஏழு மாசம்தான் ஆகுது, குறை பிரசவமா'ன்னேன்.
'இல்லன்னா, நிறை பிரசவம்தான், கல்யணம் நிச்சயம் பண்ணியதிலிருந்தே தொடர்பு இருந்தது, கணக்கு சரிதான்'னான்.
'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம்.
அதுக்கு பின்னாலா யாரும் அவனை 'கொய்யான்' னு கூப்பிடறதில்லை.
பேரவை விழாக்களும் நானும்
4 hours ago
10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//'ஆஹா, நாமத்தாண்டா அவனை தப்பா நினைச்சுட்டோம்னு' சொல்லிகிட்டோம்//
:))
நாம அப்பாவின்னு நினைக்கிறவங்க பெரும்பாலும் 'அடப்பாவி' ன்னு நினைக்கிற மாதிரி தான் செய்துடுவாங்க !
நன்றி கோவி.கண்ணன்.
மிகச் சரி. எல்லோரும் எப்போதுமே அப்பாவிகளாக இருப்பதில்லை,ஓட்டு போடும் வாக்காளர்களை தவிர...
பிரபாகர்.
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரக்ட்டா வருது. அவன் கேரக்டரையே புரிஞ்சிக்க மட்டேன்கரீன்களே
//கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரக்ட்டா வருது. அவன் கேரக்டரையே புரிஞ்சிக்க மட்டேன்கரீன்களே
//
வாழவந்தான்,
தெளிவா புரிஞ்சிட்டோம், நாங்கதான் கொய்யான்னு(அவன் விசயத்துல...)
பிரபாகர்.
நாம அப்பாவின்னு நினைக்கிறவங்க எல்லாம் அப்பாவி இல்ல நாமதான் அப்பாவி பிரபாகர்.
செர் தான் , இதுக்கு தான் சொல்றது , பசும் பாலு , இன்னு நென்சி, கள்ளிப் பால தொட்ட கத ? ஆஹா , பய மொழி எப்பிடி கீது ?
:-)
//நாம அப்பாவின்னு நினைக்கிறவங்க எல்லாம் அப்பாவி இல்ல நாமதான் அப்பாவி பிரபாகர்.//
ரொம்ப கரெக்ட் சங்கர் அண்ணா...
//செர் தான் , இதுக்கு தான் சொல்றது , பசும் பாலு , இன்னு நென்சி, கள்ளிப் பால தொட்ட கத ? ஆஹா , பய மொழி எப்பிடி கீது ?//
பய மொயி சூப்பராக்கீது. பாலெல்லாம் சொல்லி கதக்கறது டக்கராக்கீது...
யாசவி said...
:-)
நன்றி யாசவி... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...
Post a Comment