ஏப்ரல் ஃபூல் ஆயிட்டேன்...

|

காதலிக்கிறதுதான் வாழ்க்கைக்கே ஆதாரமான ஒன்னுன்னு எல்லாரும் திரும்பத் திரும்ப சொல்லவும் எனக்குள்ள கொஞ்சம் வேகம் கிளம்பிடுச்சி.

நானா?, பேரு எதுக்குங்க, நடந்த கூத்த மட்டும் பாருங்க. என்ன பண்றது! இது வரைக்கும் அந்த மாதிரி எண்ணமே இல்லாம இருந்துட்டேன். ரெண்டு மூனு தடவ நமக்கு சந்தர்ப்பம் வந்தும் வீணாக்கிட்டேன். கூடவே இருக்கிற முரட்டு சுபாவம் வேற...

மொதல்ல என் மாமாப் பொண்ணு. பல விதமா எங்கிட்ட பூடகமா பேசி, வெளிப்படுத்துச்சி. சொந்தத்துல பண்றது பாவம்னு படிச்சதால (பிடிக்கலங்கற உண்மைய சொல்ல முடியுமா?) 'என்னோட கசின் நீ, தங்கச்சி மாதிரி அதால ஒத்து வராது' ன்னு சொல்லிட்டேன். அது ஒரு மாக்கான்னு நினைச்சிருக்கும்,  நான் அப்போ கவலைப்படல.

அடுத்ததா பண்ணன்டாவது படிக்கிறப்போ ஒரு பொண்ணு என்னையே பாத்துகிட்டிருக்கும். பசங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். இன்டர்வல் சமயத்துல பசங்க புள்ளைங்க எல்லாம் வெளிய போனப்போ 'உங்ககிட்ட தனியா பேசனும்' னு சொல்லி, ஸ்கூல் விட்டதுக்கு அப்புறம் கிளாஸ்லயே இருக்க சொல்லுச்சி. கடைசி பெல் அடிச்சதும் வெளிய போயிட்டு திரும்பவும் கிளாசுக்கு வந்தேன். என்ன மாதிரியே அந்த பொண்ணும் வந்துச்சி.

’என்னன்னு சொல்லுங்க எனக்கு ஒரே பயமா இருக்கு’ ன்னேன்.

’எனக்கும்தான். என்ன தப்பா நினைக்கக்கூடாது’ன்னு சொல்லுச்சி.

’தப்பா சொல்லலைன்னா தப்பா நினைக்கமாட்டேன்’ னு தத்துவார்த்தமா சொன்னேன்.

கேக்கும்போதே கொஞ்சம் மிரண்டுடுச்சி போல. ’சரி ஒண்ணுமில்ல சும்மாத்தான்’ னு சொல்லவும், ’என்னை என்ன கேணைன்னு நினைக்கிறியா?, ஒழுங்கா சொல்லு’ ன்னு மிரட்டுறாப்ல கேக்கவும்,

’உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இருந்து இல்ல, உங்க பிரண்டு ரவிகிட்ட இந்த லெட்டர கொடுத்துடுங்க’ ன்னு சொல்லிட்டு ஒரு கடுதாசிய கொடுத்துட்டு போயிடுச்சி.

பிரிச்சி பார்த்தேன் அன்புள்ள உங்களுக்குன்னு யாருக்கு வேணும்னாலும் பிட் ஆகற மாதிரி இருந்துச்சி. ரவி கேக்காம காதல் கிடைச்ச சந்தோஷத்துல தினம் பரோட்டா, சினிமான்னு எல்லா செலவையும் பாத்துகிட்டான் அவங்களுக்குள்ள பிரச்சினை வர்ற வரைக்கும்.

இப்போ படிச்சி முடிச்சி ஒரு நல்ல வேலையில இதுக்கேன். எல்லா பிரன்ட்சும் லவ் பண்ணாத என்னை இன்னும் ஒரு மாசத்துல யாரையச்சும் லவ் பண்ணலன்னா கூட்டத்துலேயே சேத்துக்க மாட்டோம்னு கண்டிப்பா சொல்லவும், அதான் இந்த கதையோட மொத வரி.

தினமும் ஒரு பொண்ண வேலைக்கு போறப்போ வழியில இருக்கிற ஒரு பஸ் ஸ்டாப்ல பார்ப்பேன், குனிஞ்ச தலை நிமிராம இருக்கும். பஸ்சுல அது ஏறும்போது மட்டும் தலைய நிமித்தி படியப் பார்த்து ஏறும். சரி இன்னிக்கு ஒரு முக்கியமான நாள், முயற்சி பண்ணலாம்னு நம்மோட விருப்பம், விவரங்களை எழுதி பாக்கெட்டுல வெச்சிகிட்டு பஸ்சில அந்த பொண்ணுகிட்ட கொடுத்துட்டேன். எப்படின்னுல்லாம் கேக்காதீங்க, கம்பனி சீக்ரட்.

அடுத்த நாள் அந்த பொண்ணு என்ன பார்த்து சிரிச்சிச்சு. தைரியமா பக்கத்துல வந்து, 'நேத்து என்னை சூப்பரா ஏப்ரல் ஃபூல் பண்ணுனீங்கன்னா' ன்னு சொல்லி பல்பு கொடுத்துடுச்சி.

பதிவர்கள் பட்டிமன்றம்...நிறைவு...

|

(படிக்காதவங்க முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நாளை படிச்சிட்டு வந்துடுங்களேன்)

எல்லாத்துக்கும் மறுபடியும் இந்த பொன்னாத்தாளோட வணக்கம். எல்லாரையும் தலைப்பு கொடுத்து பேச சொன்னா அவங்க மனசில இருக்கிற உண்மைங்களை அப்படியே கொட்டித் தீத்திருக்கீங்க.

(ரொம்ப சொல்லிட்டோமோ - கதிர்)

மொதல்ல பேசின மணிஜி தன்னை ஒரு ரீமா ரசிகன்னு ரொம்ப அருமையா நிலைநாட்டினாரு. தண்டோராங்கற பேர ஏன் மணிஜீன்னு மாத்துனாரு? ஜீ-க்கு பதிலா ரீமாவப்போட்டு மணிரீமான்னு வெச்சிருக்கலாம்ங்கறது நம்மளோட அபிப்ராயம். இவர மாதிரி இன்னும் நிறைய பேரு இருந்தாத்தான் செல்வராகவன் மாதிரி ஆளுங்க ஓடி ஒளிஞ்சிகிட்டு இருப்பாங்க, நம்மள மாதிரி பொம்பளங்க ரொம்ப பாதுகாப்பா இருக்கலாம்.

(தாய்க்குலத்த அப்படியே நீ கவர்ந்திட்டப்பா - கேபிள்)

அப்புறம் நம்ம தைரியத்த அம்மாவோட ஒப்பிட்டாரு. அதெல்லாம் சும்மா அதுக்கும் மேலங்கறத தெளிவா அவருக்கு சொல்லிக்கறேன்.

அடுத்து அத வாதிட்டு பேசுன எங்கண்ணன், ப்ளாஷ்பேக் சொல்றேன்னு காதலப்பத்தி சும்மா கழட்டியெடுத்தாரு, அப்போ கூட்டத்துல இருந்து ஒரு பெரிய ரம்பத்த காமிச்சத நாங்க எல்லாம் பாத்தோம், அவரு மட்டும் கவனிச்சும் கவனிக்காத மாதிரி காரியத்துல கண்ணாயிருந்தாரு. அவரு வாழ்க்கையில பார்த்த காதலோட சினிமா காதலை எதுக்கு சின்க் பண்ணினாருன்னு அவருக்கும் புரியல, கேட்ட எங்களுக்கும் புரியல.

இருந்தாலும் அவரோட உண்மையான, பாசமான, உருக்கமான.... ச்சை, அவரப்பத்தி பேசும்போதே நானும் அவரமாதிரியே ஆயிட்டேன்.... வாதத்துல நியாயம் இல்லாம இல்ல.

(தோ பார்றா, நல்லா கவுத்து விட்டுட்டு... பாசத்த - வானம்பாடிகள்)

அடுத்து பேசுன யூத் கேபிளு சும்மா சில்லுனு ஆரம்பிச்சி சினிமாவ அவரோட கொத்துபரோட்டாவோட கம்பேர் பண்ணி சொல்லி சும்மா பூந்து விளையாடுனாரு. பசியோட இருந்திடலாம், படம் பார்க்காம இருக்க முடியுமான்னு ஒரு மாபெரும் தத்துவத்த எடுத்து வெச்சி எல்லாரையும் மூர்ச்சையாக வெச்சாரு.

(நல்லாத்தான் கவனிச்சிருக்கு தங்கச்சி - பிரபா)

சினிமாவில இன்னும் சொல்லப்படாத காதல் இருக்குங்ற ஒரு பயங்கரமான ஒரு மிரட்டல் விட்டு நிறைய பேர தூக்கமில்லாம செஞ்சிருக்காரு. அடிக்கிற பெல் ஓசையிலிருந்து எல்லாத்தையும் சினிமா பார்வையில பார்த்து புல்லரிக்க வெச்சி, எதிரணியினருக்கு சவாலா பேசினாரு.

(நம்ம படத்துல சொல்லிடனும் கேபிள் - மணிஜீ)

அடுத்து பேச வந்த சேட்ட நடுவரையே நல்லா கலாய்ச்சி ஆரம்பிச்சி, மொத மேடைன்னும் பாக்காம சும்ம தூள் கிளப்பி, ஸ்ரேயா நடிச்சது மொத்தம் பதிமூனு படம், அத பதிமூனு தபா பார்த்ததா சொன்னாரு. பதினாலாவது படம் வந்தா மொத்தம் இருவத்தேழு தடவ பார்ப்பாருங்கற தகவல பூடகமா சொன்னாரு.

(பிரபாவுக்கு இது கண்டிப்பா புரியாது - வானம்பாடி)

(அய்யா எனக்கு புரிஞ்சது தெரியாம எங்க தெரியப்போவுதுன்னு நினைப்பாரு - பிரபா)

சினிமா பாக்க ஆகுற செலவு, டாஸ்மார்க்ல பீர் விலை, அரசாங்கத்துக்கு எவ்வளவு கட்டிங் போகுதுங்கற தகவல் எல்லாத்தையும் சொல்லி, சினிமாவால அரசுக்கு கொஞ்சமும் லாபமில்ல,சீரழிக்குதுன்னு செலவு பண்ற ஆவேசத்துல ஆணித்தரமா அடிச்சி சொன்னாரு. பீர் குடிச்சா உடம்பு போடும்னுதான் கேள்விப்பட்டிருக்கேன், இவரு ஏன் இப்புடி காத்தா இருக்காரு...

(பீர் மட்டும் தானே சாப்புடறேன், சாப்பாடு சாப்டாதானே உடம்பு ஏறும் - சேட்டை)

அடுத்து பாலா சார், அண்ணா ஸ்னேக் பிரபா பேசுனதுக்கு மண்புழுவ பாம்புன்னு சொன்னத சொல்லி பல்பு கொடுத்ததா சொல்லிட்டு, டாஸ்மார்க் பீர்லருந்து துல்லியமா அரசாங்கத்துக்கு எவ்ளோ போகுது, சினிமாவினால ஒரு நயாப் பைசாக்கூட போறதில்லன்னு சொன்னதுக்கு அரசியலே சினிமான்னு ஒரு மாபெரும் உண்மையை போட்டு உடைச்சி எல்லாரு வாயயும் அடைச்சாரு.

(ஆட்டோ வராம இருந்த சரி - மணிஜீ)

கடைசியா பேசுன நம்ம கதிரு, பத்து வினாடிகளுக்கு அப்புறம் மவுனத்த கடியவிட்டு சும்மா பரோட்டா எபஃக்ட் பத்தி சொல்லி, கண்தானத்த பத்தி
சினிமாவுலயும் சொல்லததால சினிமா சமுதாயத்தோட சீர்கேடுன்னு ஆணித்தரமா சொன்னாரு. நல்ல வேளை இங்க குடிக்க வெச்சிருக்கிற மினரல் வாட்டர்ல ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லங்கறத கவனிக்காம விட்டுட்டாரு.

(அடுத்த இடுகையில போட்டுடுவோம் - கதிர்)

ஆக கடைசியா ரெண்டு தரப்பு வாதத்தையும் வெச்சி பார்க்கும்போது நம்மோட தீர்ப்பு என்னான்னு சொல்ற நேரம் வந்துடுச்சி. சினிமா சீரழிக்குதுன்னு கேவலமா சொன்னவங்க, என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ஒரு வருஷத்துக்கு சினிமாவா பாத்துகிட்டிருக்கனும். சினிமா சீர்படுத்துதுன்னு பெருமையா சொன்னவங்க பொத்திகிட்டு சினிமா பக்கமே போவாம அவங்க அவங்க வேலய ஒழுங்கா பாக்கனும். ஒரு வருஷம் கழிச்சி ஏண்டா இப்படி பேசனும்னு நீங்க எல்லாரும் வருந்தி இதே தலைப்புல திரும்பவும் இந்த நாட்டாமை முன்னால பேசனும்.

(கேபிள், நம்ம தொழிலே இதுதானே - மணிஜீ)

இத ஒழுங்கா பாலோ பண்ணாதவங்களோட பதிவுங்கள்ல பின்முன் நவீனத்துவ கமெண்ட்டுகளா தொடர்ந்து போடப்படும். அவங்கள பாராட்டி பின்னூட்டம் போடறவங்களுக்கு சைடு, பக்கவாட்டு நவீனத்துவ பின்னூட்டங்கள்னும் நிறையவே போடப்படும். இதுதான் இந்த 'நெட்’டாமயோட தீர்ப்புங்கோ!

ஒரு வழியா முற்றும்....

(எல்லாத்தயும் படிச்ச உங்களுக்கு என் நன்றி. எழுத ஊக்குவித்த என் ஆசானுக்கு நன்றி...)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB