பக்கத்து வீட்டு அத்தைக்கு சாமி வரும்னு என்னோட 'சாமியாட்டம்' பதிவில சொல்லியிருக்கிறேன்.
நானு, அம்மா, என் தம்பி, சாமியாட்டம் அத்தை எல்லாம் வாசல்ல திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கும்போது (அப்போ இருந்த வீட்டுல திண்ணை இருந்துச்சி... இப்போல்லம் யாரு வெச்சு கட்டுறா?)
அப்போ, உடுக்கை சத்தம் பலமா கேக்க ஆரம்பிச்சுது. அம்மாகிட்ட 'என்னம்மா உடுக்க சத்தம், எதாச்சும் பேயோட்டறாங்களா?'ன்னு கேட்டேன்.
'ஆமா பிரபு, மூக்காயிக்கு பேய் புடிச்சிருக்காம், அதான்'னு சொன்னாங்க.
என் தம்பி கிண்டல 'உடுக்கை சத்தம் கேட்டாவே அத்தைக்கு சாமி வரனுமே' ன்னு விளையாட்டுக்கு சொல்ல,
'ஆமாண்டா, இப்போ ஆத்தா வர்றப்போறா!' ன்னு சொல்லிட்டு வேகமா அந்த வீட்டுக்குள்ள ஓடுச்சி.
உள்ள விட முடியாதுன்னு மூக்காயி அண்ணன் சொல்ல, 'என்னயேவாடா' ன்னு பொளிச்சுன்னு ஒரு அறை வெச்சி, தள்ளிட்டு உள்ள போச்சி.
பின்னாலயே நாங்களும் ஓடினோம். 'டேய் பூசாலி, ஊரை ஏமாத்துறியாடா?' ன்னு கேட்டுகிட்டே முன்னால போயிட்டு சாமியாட ஆரம்பிச்சுது.
இத பாத்துட்டு ஏற்கனவே பயங்கரமா பேயாட்டம் ஆடிகிட்டிருந்த மூக்காயி நிறுத்திட்டு வேடிக்க பாக்க ஆரம்பிச்சுடுச்சி.
பேயோட்டறவர அப்போதான் கவனிச்சேன், நம்ம சித்ராவுக்கு ஓட்டின அதே ஆளு, கூட கிளி, முடி கொஞ்சம் அதிகமா இருந்துச்சி.
வாழ்க்கையிலயே மொத மொதலா சாமியையும் பேயையும் ஒரே இடத்துல சமாளிச்சவரு அவராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.
'வா ஆத்தா, வந்து உட்காரு'ன்னு சொல்ல மூக்காயி ஆட அரம்பிச்சது. சவுக்கால விசிறி, 'சும்மரு, ஆத்தாவ கவனிச்சிட்டு அப்புறமா வர்றேன்' ன்னு சொல்லவும், நல்ல புள்ளயா அமைதியாயிடுச்சி.
'சொல்லு ஆத்தா, நீ யாரு?' பூசாரி
'டேய் என்னையே தெரியலயா' சாமி
'தெரியாமத்தானே ஆத்த கெக்கறேன், சொல்லு சாமி' ன்னு பணிவா கேட்டாரு.
'நாந்தான் அங்காள பரமேஸ்வரி' சாமி
'சரி ஆத்த, ஒத்துக்கறோம், நீ சாமின்னு நம்பனும்னா ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லியாகனும்' பூசாரி.
'எனக்கே பரிச்சயாடா, உலகத்துக்கே பரிச்ச வெக்கிறவ நானு' சாமி
'அது தெரியும், பொது இடத்துல நிரூபிக்கனும்ல' பூசாரி.
'ஆமா நிரூபிக்கனும்ல' கிளி.
கடைசியா 'கேளுடா அற்ப பதரே' ன்னு சொல்லவும்
'வீரங்கி அய்யனாருக்கு சோத்துக்கை பக்கம் யாரு இருக்கா, பீச்சாங்கை பக்கம் யாரு இருக்கா? இத மட்டும் சொல்லு நான் சாமின்னு நம்பறேன்' பூசாரி.
'ம், அதெல்லாம் உங்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல' ன்னு சொல்ல சவுக்க எடுத்து விளாச ஆரம்பிக்க,
'அய்யோ இந்த பாவி என்னை அடிச்சே கொல்றானே' ன்னு கத்த அதுக்குள்ள தகவல் போய் அவங்களோட அம்ம வந்து பூசாலிய கன்ன பின்னான்னு திட்டிட்டு கூட்டிட்டு போயிடுச்சி.
அன்னியிலிருந்து இன்னிய வரைக்கும் அத்தைக்கு சாமி வர்றதில்ல.
அப்புறம் மூக்காயிக்கு என்ன ஆச்சுங்கறீங்கள? பேயோட்டறவர்கிட்ட புடிச்சிருக்கிறது ஐம்பது பேயின்னு சொல்லி அவங்கம்மாவுக்கு ஆப்பு வெச்சிடுச்சி.
முன்னோட்டம்:
அடுத்த பதிவு... 'எனது முதல் ரயில் பயணம்'
'பங்காளி ட்ரெயின புடிச்ச மாதிரிதான்' நான்
'ஃபர்ஸ்ட் கிளாஸ் எப்படின்னா இருக்கும்'
'கொஞ்சம் கூட அறிவே இல்ல? படிச்சவங்க மாதிரி இருக்கீங்க'ன்னாரு டி.டி.ஆர். படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.