என்
தூக்கமது விழித்திட
தூக்கமில்லை இனி தோழி...
என்
துக்கமது தொலைந்திட
துயரமில்லை இனி தோழி...
என்
காதலில் நீ சேர்ந்திட
களிப்புதான் இனி தோழி...
என்
மருந்தாய் நீ மாறிட
நோயில்லை இனி தோழி...
என்
உறவாய் நீ மாறிட
உயிர் நீதான் இனி தோழி...
என்
ஒளியாய் நீ மாறிட
வாழ்விருளில்லை என் தோழி...
என்
காதலாய் நீ மாறிட
கவலையே இல்லை என் தோழி ....
என்
வாழ்வாய் நீ மாறிட
வசந்தம் தான் இனி தோழி...
நினைவாடும்...
உன்னுள் நான்.
தோழி...
வகை : கவிதை... | author: பிரபாகர்Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
Post a Comment