இருபத்தொன்னு... பதினொன்னு பத்து...

|


அலுவலகத்திற்கு அவசரமாய் சென்றுகொண்டிருந்தான்.

பத்தரைக்குக் கிளம்புபவன் இன்று இருபது நிமிடம் தாமதமாகக் கிளம்பியதால் கொஞ்சம் படபடப்பும் சேர்ந்திருந்தது.

தினமும் செல்லும் பரபரப்பான  சாலையில் கொஞ்சம் விரைவாகவே விரட்டினான். வழக்கத்தை விடவும் இன்று அதிக போக்குவரத்து இருப்பதாய்ப் பட்டது.

மனதிற்குள் உலகம் அழியப்போகிறது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து மெலிதாய் ஒலிக்கும் பாடலை ரசித்தபடி சென்றுகொண்டிருந்தான்.  

புரளிதான் என்பது உறுதியானாலும் நண்பன் ஒருவன் போனில் கரிசனமாய் அழைத்து பதினொன்னு பத்துக்கு உலகம் அழியத்தான் போகிறது என்பதை அறுதியிட்டுச் சொல்லியிருந்தான்.

வளைந்து திரும்பி வண்டியினை வேகமெடுக்க முறுக்கியவன், செவ்வக வடிவில் உள்ளங்கை அகல கிரானைட் கல் சாலையில் கிடப்பதை கவனித்தான். அதில் ஏற்றாமல் வளைத்து லாவகமாய் சென்ற அடுத்த நொடியில் மனதிற்குள் யாராவது சறுக்கி விழலாம், தெறித்து பக்கத்தில் செல்பவர் மீது படலாம், எனவே அதனை எடுத்துப் போட்டுவிட்டு செல்லலாமே எனத் தோன்ற, செய்யலாமா வேண்டாமா என ஒரு சிறு தடுமாற்றம். 

போடலாமென முடிவில் நிற்க ஓரமாய் நிறுத்தினான். ஐம்பது மீட்டர் தொலைவில் ஒரு லாரிதான் வந்து கொண்டிருந்தது.

ஓடிச்சென்று அந்த கல்லினை எடுத்துக்கொண்டு திரும்பினான்.

ஏதோ குனிந்து எடுத்து திரும்புவதைக் கவனித்த லாரி டிரைவர், எடுத்துத் திருமபுவதை கவனித்து, சென்று விடுவான் என அவதானித்து சிறிதும் வேகத்தை குறைக்காமல் லாரியை செலுத்திக் கொண்டிருந்தான். 

கல்லினை எடுத்து திரும்பியவன் ஷூ லேஸ் மாட்டி தடுமாறி விழுந்தான். 

அப்போது சரியாய் நேரம் பதினொன்னு பத்து. 

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

பூந்தளிர் said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB