இருபத்தொன்னு... ஆ...

|

’ஏங்க, நிஜமாவே இருபத்தொன்னில உலகம் அழிஞ்சிடுமா?’

‘அதிலென்ன சந்தேகம், எங்க பார்த்தாலும் அராஜகம், பூமாதாவுக்கே பொறுக்காது. புட்டுக்கும்’

‘லாஜிக் பார்க்கனுங்க, எல்லாரும் சொல்றாங்கன்னு நாமும் அப்படியே நம்பக் கூடாதுல்ல...’

‘இருக்குற கஷ்டத்துக்கு பொசுக்குன்னு போறதுதான் நல்லதுன்னு தோனுது...’

‘ஒவ்வொரு மதத்திலயும் ஒவ்வொரு மாதிரி சொல்லி மக்கள ஏமாத்துறாங்க’

‘ஆனாலும் எதுக்கும் ஒரு முடிவு இருக்குல்ல, இப்போ இந்த பூமிக்கு வந்துடுச்சின்னு நினைக்கிறேன்...’

‘மொதல்ல ஸ்கைலாப் விழப்போகுதுன்னு இப்படித்தானே புரளிய கிளப்புனாங்க’

‘இப்ப எல்லாம் மாறிடுச்சி... ஓசோன் புட்டுகிச்சி, பொல்யூசன், விவசாய நிலமெல்லாம் அழிஞ்சாச்சு..., இனிம சுடுகாடுதான்’

‘நீங்க சொல்றத பார்த்தா எனக்கும் நம்பனும் போல் இருக்கு’

‘ஆமாங்க, இன்னும் ரெண்டுநாள் தான் இருக்கு, நிறைவேறாத ஆசை ஏதாச்சும் இருந்துச்சின்னா பட்டுனு செஞ்சு முடிச்சிடுங்க, கடைசி ரெண்டு நாள்லயாவது சந்தோசமா இருந்துட்டு நிம்மதியா செத்துடுங்க’

’நீங்க சொல்றதுதான் சரின்னு படுது.  கண்டிப்பா செயல் படுத்தவேண்டியதுதான்’

‘என்னங்க பையில இருந்து எடுக்கிறீங்க, துப்பாக்கி மாதிரி இருக்கு’

‘ஆமாங்க, வாங்கி அப்படியே வெச்சிருக்கேன், யாரையாச்சும் சுட்டுப்பாக்கனும் ஆசை, நிறைவேத்திட வேண்டியதுதான்’

‘அதுக்கு நாந்தான் கிடைச்சேனா...ஆ....’


1 Comentário:

செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம் said...

அட அட என்ன சிந்தனை என்ன சிந்தனை...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB