கரண்ட்...

|


ப்ளீஸ். என்னைப் புரிஞ்சிக்கோ ரேஷ்மி'

'என்ன புரிஞ்சிக்கிறது, எப்பவாச்சும் சொன்ன டயத்துக்கு வந்திருக்கீங்களா?'

'ஐயோ, எத்தன தடவ சொல்றது, கிளம்பும்போது என்னோட ஃப்ரண்ட் கால் பண்ணிட்டான், வெக்க முடியல'

'உங்களுக்கு எப்பவுமே உங்க ப்ரண்ட் தான் முக்கியம், என்ன விட்டிடுங்க ப்ளீஸ்...'

'நெஜமா என் மேல தப்பு இல்லை, இது மாதிரியெல்லாம் எடுத்தெறிஞ்சி பேசாத'

'ஒரு தடவன்னா நம்பலாம், ஓராயிரம் தடவை இதே கதை'

'இந்த உலகத்தில எனக்கு உன்னைத் தவிர யாரும் முக்கியமில்லை தெரியுமா'

'ஃப்ரண்ட் போன கட் பண்ணிட்டு வரத் தெரியல, வக்கனையா பேச மட்டும் தெரியுது'

'ரேஷ்மி, இந்த மாதிரியெல்லாம் பேசாத, அப்புறம் என்ன பண்ணிக்குவேன்னு தெரியாது'

'சும்மா இந்த பூச்சாண்டிஎல்லாம் காட்டாத, உன் பேச்சுக்கெல்லாம் மசிய மாட்டேன்'

'அவ்ளோ தானே, உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்னு நிரூபிக்கிறேன்'

சொல்லிவிட்டு அருகிலிருந்த மின் கம்பத்தில் விடுவிடுவென ஏறி கம்பியைப் பிடித்தான் சுபாஷ்.

(பெயர்களை லதா, சுரேஷ் என மாற்றி வருடத்தை தொண்ணூறு என கற்பனை செய்து பார்த்தால் இன்னொமொரு கதையும் உங்களுக்கு கிடைக்கும்)

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல இன்னொரு கதை...

Mr.E said...

I guess, thanks to the new government, so that he could demonstrate!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB