பஸ்சும் பதிலும்...

|

என் ஆசான் எனக்கு விட்ட பஸ்...

அன்பு நண்பா,
அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதியை இடுகையிலும் கவிதையிலும் நீ கிழித்தபோது படித்து ரசித்த கோடானு கோடி கேடியில் ஒருவன் நான். நாக்கு மாறினாலும் வாக்கு மாறாதவர் நீர் என நம்பினேன். உங்கள் ஊருக்கு வர இரண்டு வாரத்துக்கு முன்பு ‘ஆத்து நிறைய தண்ணி, அது நிறைய மீனு! புடிக்கப்போறேன்னு’ சொன்னப்ப கூட வெள்ளந்தியா மீன்புடிக்க தெரியுமான்னு கேட்டு ஃபோட்டோ புடிக்கப் போறேன்னு சொன்னப்ப பல்பு வாங்கின பக்கிப்பயதான். ஆத்தப்பாத்து நாளாச்சேன்னு ஆசையா வந்தப்ப ஊத்தைக்கூட காட்டாட்டியும் பரவால்ல. குருவிய பார்த்த சந்தோஷத்தோட ஊரு திரும்பலாம்னு இருந்தப்ப அருவியக் காட்டுறேன்னு அள்ளி விட்டீங்க. நம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பினோம். பாதி வழியில ஆம்னி பஸ் இல்லையாம்யா! அருவிபாட்டுக்கு அங்க இருக்கட்டும் நாம உருவிக்கிட்டு ஓடுறதப் பாக்காலாம்னீங்க. ‘ஏஏஏன்’னு ஒரு வார்த்தை கேட்டிருப்பேன்?
அட இதெல்லாம் உங்கள மீறின விஷயம் ஒத்துக்கிர்ரேன். வந்ததுல இருந்து வாராவாரம் ஃபோன் பண்ணி, இண்ணைக்கு வாரேன், அண்ணைக்கு வாரேன்னு வாக்குறுதி குடுக்குறீங்களே. எப்பங் சார் வரப்போறீங்க. வரப்ப அந்த 1 டி.பி. ஹார்ட் டிஸ்குண்ணாச்சும் வாக்கு தவறாம கொண்டு வருவீங்களா சார்

எனது பதில்...

ஆருயிர் ஆசான்,

உங்களின் ரசனைக்கு என் கேடி வணக்கம். நம்பிக்கையே வாழ்க்கை, வாழ்க்கை வாழ்வதற்கே எனும் கொள்கையில் ஊறித் திளைத்துள்ள எனக்கு உங்களின் பஸ் சிறு வியப்பளித்தது. உங்களின் அதீத சந்தேகங்களுக்கு விளக்கம் தரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

மீன் பிடிக்கப் போகிறேன் எனச் சொன்னது ஏரியில், ஆற்றிலல்ல. ஆறு வற்றியபின் தான் ஏரி வற்றும் என்பது உலக நியதி. எல்லாம் அறிந்த தங்களுக்கு இது விளங்காததன் மர்மம் எனக்கு மர்மமாயிருக்கிறது.

உங்களுக்கு மட்டுமல்ல, குருவிக்கும் ரொம்பவும் சந்தோஷம் போலிருக்கிறது, இன்னமும் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்து ஆசான் உங்களைத் தேடுகிறது, தலையை ஆட்டி ஏதோ சொல்லுகிறது. ஒருவேளை உங்களைப்பற்றிய விசாரிப்பாயும் இருக்கலாம்.

அருவிக்கு வருவோம், அதான் போகவே இல்லை என்கிறீரா? அருவி விஷயத்துக்கு என சொல்ல வந்தேன். அருவிக்கு கிளம்ப எத்தனிக்கும் தருணத்தில்தன் இந்த சிறிய இதயம் தாங்காத அளவிற்கு ஒரு பெரிய விஷயமாய் வந்தது, இரவு செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ் பராமரிப்புக்கு செல்கிறது, டிக்கெட் இல்லையென.

ட்ரெயினே உங்களுக்காகா இருந்தபோதும், பேருந்தில், அதுவும் அல்ட்ராவில் அழைத்துப்போகிறேன் என அல்டாப்பாய் சொல்லிவிட்டேன் அல்லவா? அருவியை விட ஆசான், கொடுத்த வாக்குறுதி (அருவியும் வாக்குறுதிதானே என இடை மறுத்துக் கேட்ப்பீர்கள் எனத் தெரியும். ஆனாலும் ஆசானின் உடல் நலத்தோது சம்மந்தப்பட்ட அல்ட்ராவே பிரதானம்) ஆகியபவற்றைக் கருதி முன்னதாய் கிளம்பினோம்.

உளுந்தூர்  பேட்டை வரை சாதாரணப் பேருந்தில் கடைசி சீட்டில் முதுகெலும்பை சுளுக்கெடுக்க வைக்கும் அளவிற்கு சிரமத்தோடு கூட்டிச் சென்றாலும் அதன் பின் குளிரில் நடுங்கி, தும்மலோடு காய்ச்சல் வருமளவிற்கு ஏசி பஸ்ஸில் கூட்டிச் சென்றதை மறந்துவிட்டேரே?

உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் தவிப்பில் இருக்கின்ற காரணத்தால் தோன்றும் தருணங்களிளெல்லாம் ஆர்வக் கோளாரில் வருகிறேன் எனச் சொல்லிவிடுகிறேன். இதில் புதைந்துள்ள என் அன்பை ஆராயாமல் இப்படி அப்பட்டமாய் அரசியல் வாதியாக்கிவிட்டீரே என எண்ணும்போது மனம் பதைக்கிறது, சிந்தை நடுங்குகிறது. இப்போது சொல்கிறேன் ஆசான் கண்டிப்பாய் நாளை வருகிறேன். இதைப் படித்து பார்க்கும்போதெல்லாம் எந்த அளவிற்கு வாக்குத் தவறாத உத்தமன் நான் என உங்களுக்கு விளங்கும். வரும்போது 1  டி.பி யோடு 350 ஜி.பி  யும் கொண்டுவருகிறேன் கூடுதலாய்.

அப்புறம் அடுத்தமுறை எலி பிடிப்பது, ஓனான் அடிப்பது, மணல் வீடு கட்டுவது எவ்வாறு என சொல்லியும் செய்தும் காட்ட ஏற்பாடு செய்கிறேன். இன்னும் பற்பல விஷயங்களை சொல்லாமல் செய்தும்  அசத்திக்காட்டுகிறேன்.

இப்படிக்கு,

என்றும் அன்புடன் உங்களால் சிஷ்யன்,
பிரவு என உங்களால் அன்போடும் அழைக்கப்படும்,

பிரபாகர்.

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

rajamelaiyur said...

//
வரும்போது 1 டி.பி யோடு 350 ஜி.பி யும் கொண்டுவருகிறேன் கூடுதலாய்.
//
இலவச இணைப்பா ?

rajamelaiyur said...

Tamilmanam first vote

க.பாலாசி said...

//தும்மலோடு காய்ச்சல் வருமளவிற்கு ஏசி பஸ்ஸில் கூட்டிச் சென்றதை மறந்துவிட்டேரே?//

அதான் ரெண்டுநாள் நோவு வந்து கெடந்தாரா?.

settaikkaran said...

என்ன பிரபாகர் இது? ஒரு வாக்குக் கொடுத்தா அதக் காப்பாத்த வேணாம்? கொஞ்சம் கூட பருப்பில்லாம இப்படியா? :-)

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கும் வாங்க!ஜாயின் பண்ணுங்க!
கருத்து சொல்லுங்க!நல்லா பழகுவோம்!!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB