தேர்தலில் தெடாவூர்...

|

தேர்தல் சமயத்தில் அன்றாட நிகழ்வுகளை பத்திரிக்கைகளில், பஸ்-களில் படித்துத் தெரிந்து கொள்வதுபோல் உள்ளூர் நிகழ்வுகள் எல்லாம் செல்பேசித் தெரிந்து கொள்கிறேன்.

எங்களின் தெருவில் ரோடு போடுகிறோமெனெ கொத்தி வைத்ததால் எந்த ஒரு வாகனமும் உள்ளே வர இயலாத சூழல் நேற்றைக்கு முந்தைய நாள் வரை. இன்று ஜல்லி, மண் எனக்கொட்டி ரோடு ரோலரால் அமுக்கி தார் போடுவதற்குத் தயாராயிருக்கிறது. இனிமேல் பிரச்சார வாகனங்கள் நிறைய வரும்.

தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க தான் அதிக வோட்டுக்களை இதுவரை வாங்கி வந்திருக்கிறது. வன்னியர்கள் மிக அதிகமாயிருந்தும் பா.ம.க விற்கு ஓட்டுப் போடுபவர்கள் மிகக் குறைவே.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டாலும், வாங்கு திறனும் அதிகமாயிருக்கிறது. மக்கள் காசு வாங்கினாலும் மனதில் நினைத்தவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்.

கைசின்னத்துக்குதான் சாகிற வரைக்கும் போடுவேன் எனச் சொல்லும் பாட்டிகளும், ரெட்டெலக்குத்தான் என் ஓட்டு  எனச் சொல்லும் பாட்டிகளும், பார்ட்டிகளும் நிறையவே இருக்கிறார்கள்.

உடையார் சமூகத்தினர் நாற்பது சதம் பேர் இருக்கிறார்கள், பெரும்பாலோனோர் ஐ.ஜே.கெ-வுக்கு ஓட்டு போடுவார்கள் என்பதால் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக இருக்கும்.

டாஸ்மாக் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் ஒரு வாரமாக விவரமாய் பதுக்கல் வேலைகளை செய்து, தயாராய் இருக்கிறார்களாம்.

சம்மந்தப்பட்டவர்களிடம் பணம் வந்து சேர்ந்துவிட்டாலும், இன்னும் பணப் பட்டுவாடா ஆரம்பிக்கவில்லை.

விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று ஓட்டு போடமுடியுமா எனத் தெரியவில்லை. கடமையாற்ற கடைசிவரை முயற்சிப்போம்.

நேற்று என் மகன் 'கலைஞர் தாத்தா ஜெயிப்பாங்களா இல்லை ஜெயலலிதா அம்மா ஜெயிப்பாஙகளா?' எனக் கேட்டார்.

நாயகன் ஸ்டைலில் 'எனக்குத்தெரியாதுப்பா' என சொல்லி, 'சரி நீங்க சொல்லுங்க' எனக் கேட்டதற்கு, 'சென்னை சூப்பர் கிங் ஜெயிக்கும்' எனச் சொல்லிவிட்டு சென்றார்.

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

மாதேவி said...

"இன்று ஜல்லி, மண் எனக்கொட்டி ரோடு ரோலரால் அமுக்கி தார் போடுவதற்குத் தயாராயிருக்கிறது"..

தோ்தல் முடிய ரோட்டும் காணாமல் போயிடும். )

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்..

வணக்கம் நண்பா

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB