சச்சின்... என் தம்பி!...

|

சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அனைத்து ஆட்டங்களையும் பார்த்து வந்திருக்கிறேன். சச்சின் விளையாடும் போட்டிகளை அதீத ஆர்வத்துடன் பார்ப்பேன், மற்றைய ஆட்டங்களையும் பார்ப்பேன். சச்சின் விளையாடும் முதல் பந்தினைத் தவிர்த்துத்தான் பார்ப்பேன்.

ஒரு சமயத்தில் சச்சின் அவுட் ஆனால் அதன் பின் பார்ப்பதை விட்டுமிடுமளவிற்கு இருந்த நான், நாளடைவில் மற்றவர்கள் விளையாடுவதையும் பார்க்க ஆரம்பித்தேன்.

சச்சினை தம்பி எனத்தான் அழைப்பேன். என் தம்பிக்கும் சச்சின் என்றால் உயிர். வானம்பாடிகள் அய்யா சச்சின் கையிழுத்திட்ட பேட்டை வாங்கித்தருகிறேன் எனச் சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா?

முதல் நபராக இருநூறு ரன்கள் எடுத்த அன்று நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தேன். இன்றும் சச்சின் 100 அடித்தால் 'என்ன உன் பிரதர் செஞ்சுரி போலிருக்கு' என் என் நண்பர்கள் போனில் அழைத்து பேசுவார்கள். சச்சினுடன் எனது குடும்பத்தாரோடு டின்னர் சப்பிடவேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவுகளில் ஒன்று.

ஒரு விளையாட்டு வீரன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சச்சினை கண்டிப்பாய் உதாரணமாய் காட்டலாம். எத்தனை விதமான விமர்சனங்கள்?... விமர்சனங்களுக்கெல்லாம் பேட்-டில் பதில் சொல்லி எத்தனையோ சறுக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதனைகள் படைத்துவரும் என் தம்பி சச்சின்... நீ இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும், இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும். உலகக் கோப்பை-யை வாங்கித் தந்தாலும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

ஆமோதிக்கிறேன் நண்பரே! :-)

ஈரோடு கதிர் said...

பொடிப்பையன் சச்சினுக்கு மட்டும் அண்ணனா??

அண்ணே
நீங்க ஊரு உலகத்துகே
அண்ணன்னே!!!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB