என் இனிய வேணுஜி...

|


எனது வலைப்பூவின் முகப்பில் குறிப்பிட்டார்போல் இடுகை எழுத வந்ததன் நோக்கம் நல்ல பல உள்ளங்களைப் பெறுவதற்காகத்தான் என்பதற்கு ஏதுவாய் எனக்கு கிடைத்த பலரில், முத்தாய்ப்பாய் கிடைத்திட்ட வெகு சிலரில் வேணுஜியும் ஒருவர். ’வலைப்பூ உலகமப்பா அதில் வந்தாச்சு கலகமப்பா’ என ‘தரைமேல் பிறக்க வைத்தான்…. எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்…’ எனும் படகோட்டிப் படப்பாடலின் சாயலில் நடப்பு நிகழ்வுகளை வெளுத்து வாங்கியிருந்த ஒரு பாடலை எதேச்சையாய் நண்பர் ஒருவர் குழுமத்தில் இருந்து எனக்கு சிபாரிசு செய்ய, அதன் மூலம் தான் ‘வேணுஜி’ யின் அறிமுகம் கிடைத்தது.

தினமும் ஜி டாக்கில் பேச்சு, அவரிடம் எனது இடுகைகளைப் பற்றிய அலசல்கள், அவரின் தமிழ்த் தென்றலில் வருகின்ற நல்ல பல விஷயங்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள், மன பாரங்களை இறக்கி இலகுவாக்கும் உள்ளார்ந்த பேச்சுக்கள், ஒத்த கருத்துக்களோடு நடப்பு நிகழ்வுகளைப் பற்றிய அலசல்கள்… என செம்மையாய் வளர்ந்த எங்கள் நட்பு, சிங்கையிலிருந்து சென்னை வந்ததும் சந்திக்க வாய்ப்பு கிடைத்து நெடுநாள் பழகியது போல் சட்டென பிரவாகமானது.

ஒல்லியான தேகம், தீர்க்கமான கண்கள், இதோ பழகுவதற்கு எளிமையாய் நான் எனச் சொல்லும் சிரித்த முகம், விருட்டென நடை, சரளமான தமிழ்ப் பிரவாகப் பேச்சு… இது தான் வேணுஜியின் அறிமுக அடையாளங்கள்.

அவரோடு சந்திப்பு நிகழ்ந்த அன்று அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பத்தார் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்க, நானும் குடும்பத்தில் ஒருவனான அன்றைய நாள் எனது வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணங்களுல் ஒன்று. நட்புக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒரு பழுத்த அனுபவசாலி, நாற்பதை நெருங்கும் மனதால் என்றும் இளைஞன் என்று சொல்லிக்கொள்ளும் நான் என எங்களிடையே மலர்ந்து நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் எங்களின் நட்பைவிட ஒரு நல்ல உதாரணம் வேண்டுமா என்ன?

எனது வற்புறுத்தலின் காரணமாய் வலைப்பூவிலும் கால் பதித்து, பழங்கஞ்சியில் சூடாய் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். ’ஸ்பெக்ட்ரம் பார்க்கின் சுற்றமில்லை... அன்னையே’ என அவரே பாடி யூ ட்யூபில் ஏற்றியிருக்கும் இந்த பாடலைக் கேட்டுப்பார்த்தால் இவரின் திறமையின் ஒரு துளி நமக்குப் புரியும்.

அரசியல், விளையாட்டு, பழந்தமிழ் பாடல்கள் என எல்லாத் துறைகளிலும் புகுந்து விளையாடி தமிழ்த்தென்றலில் மணம் வீசிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட், சினிமா பற்றிய விவரங்களை நா, விரல் நுனிகளில் வைத்திருக்கிறார்.

அவருடன் உலகப்பட விழாவில் ஜாக்கி அண்ணா மற்றும் உண்மைத்தமிழன் அண்ணாவை சந்தித்தது என் வாழ்வின் மற்றுமொரு சந்தோஷ தருணம். சென்னை சென்றால் சந்திக்க இன்னும் இரு அன்பு உள்ளங்கள்… இவர்கள் இருவரையும் பற்றி தனியே இடுகையினில் சொல்லியாக வேண்டும். இந்த இடுகை வேணுஜிக்காக என்பதால் அவர்களைப் பற்றி அதிகம் சொல்லாமல் செல்கிறேன்.

உ.த அண்ணா, நான், வேணுஜி & அல்டிமேட் ஜாக்கி அண்ணா

சென்னை சென்றால் வேணுஜி அவர்களுக்காக ஒரு நாளினை ஒதுக்கிச் செல்லும் அளவிற்கு எங்களின் நட்பு பலப்பட்டிருக்கும் இந்த சூழலில், நட்பின் பெருமையினை புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் அவருக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் சொல்லி, அவரை அறிமுகம் செய்து வைத்த கடவுளுக்கும் இணையத்துக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

தனிமரம் said...

Unkal natpuvalara valltukkal

vasu balaji said...

அட இவர்தான் வேணுவா? எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு. :))

kathir said...

வேணுசார்
இவ்வளவு நாள் கழிச்சு இந்த பாட்டில் சந்திப்பேன்னு நினைக்கல :))))

மிக்க மகிழ்ச்சி!!!

//நாற்பதை நெருங்கும் மனதால் என்றும் இளைஞன்//

பெரிய கலைஞரின் “இளைஞன்”

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB