வெற்றுரை பேசாதீர்... இனியாவது.

|

இன்றைய பொழுது எனக்கு கொஞ்சம் துயரமாகவே விடிந்திருக்கிறது. ஆம், வெற்றுரை பேசாதே! என என் சகோதரி கடைசியாய் ஒரு இடுகையிட்டு மனத்தினை கனக்கச் செய்திருக்கிறார். எல்லோரும் இதுபோல் முடிவெடுக்க இருக்கும் சூழலில் தான் வலையுலகம் இருக்கிறது. ஆனாலும் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியையும், ஒரு வெறுப்பையும், ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ‘ச்சை’ என நொந்து கொள்வதாயும் இருக்கிறது.

கண்டிப்பாய் அவர்களை திரும்ப வரவேண்டும் எனவோ முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவோ கேட்கப்போவதில்லை. ஏனென்றால் வயதில் மட்டும் தான் நான் மூத்தவன். அவர்களுக்குத் தெரியாததல்ல, யோசிக்காமல் முடிவெடுப்பவர் அல்ல என் அன்பு சகோதரி. அதே நேரம் சில நேரங்களில் அவருக்கு இங்கிருக்க தோதுவாய் எதுவும் இல்லையே எனக்கூட எண்ணியிருக்கிறேன்.

ஆயிரம் சோகங்கள் உள்ளுள் இருந்தாலும் ‘கலகல’ வென இருக்கும் என் ப்ரிய சகோதரி பாரதி கண்ட புதுமைப் பெண். ஆயிரம் வியாக்கியானம் பேசினாலும் பேதமை காட்டும் இந்த உலகில் அவர் தனித்திருத்தலே பலருக்கு காதில் புகை வருவதாயிருக்கும்.

தனித்திருத்தல் என்ற வார்த்தையினை எந்த பொருளில் வேண்டுமாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் சொல்ல வருவது இப்படித்தான் இருக்கவேண்டும், இதுதான் நியதி, இப்படித்தான் செய்யவேண்டும் என போலியாய் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி, நம்மை சிறைப்படுத்திக் கொண்டு ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என வாழ்வின் பொருள் விளங்காமல் வாழும் சூழலில் இப்படித்தான் என பட்டென உள்ளவற்றை சொல்லும் குணமுடையவர் என்ற பொருளில்.

நிறைய எதிர்ப்புக்களை, கருத்து மோதல்களை சந்தித்த நீங்கள், இவ்வாறெல்லாம் ரௌத்ரம் பழகி, உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி, உண்மையைச் சொல்லி உங்களை ரணப்படுத்திக்கொண்டு நேர விரயத்தோடு வாழ்வதைவிட அதை நிகழ்வினில் பயன்படுத்தி இன்னும் உபயோகமாய் வாழ்வினை நீங்கள் அர்த்தமாக்கிக் கொள்ளலாம், கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

என்னை அண்ணா என விளிக்கும்போதெல்லாம் சகோதர வாஞ்சையில் என் அடிமனதில் சந்தோஷம் பொங்கும். என் வாழ்வில் மற்றவரின் அறிவு, திறமை, வாழும் முறை என பிரம்மித்த இருவர்களில் இவரும் ஒருவர். ஒரு முறை கூட பேசியதில்லை, மடல், பஸ், சாட் என மட்டும்தான் அவரோடு எனக்கு பழக்கம். நிறைய என் ஆசான் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

துயரத்தில் இருக்கும் தருணங்களில் அவர் சொல்லும் ஆறுதல்கள் மயிலறகால் வருடுவதுபோல் இருக்கும். சில நாசூக்காக நச்சென்று இருக்கும். கொஞ்ச நேரம் சாட் செய்தாலே கவலைகள் மறந்து எல்லாம் இலகுவாய் ஆனதுபோல் இருக்கும்.

வலையுலகை விட்டு சென்றாலும் எங்கள் வாழ்வுலகில் சகோதரியாய், ஒரு அன்னையாய், தோழியாய் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதால் உங்களால் அண்ணாவென விளிக்கப்பட்ட நான் மனம் கனத்து பிரியா உங்களுக்கு பிரியா விடை தருகிறேன், ஒரு சின்ன வேண்டுகோளோடு.

ஆம் சகோ, இன்னும் நிறைய எழுதுங்கள், உங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அறிவுறுத்துங்கள். நண்பராய், தகப்பனாய் ஆசானாய் அய்யா, சகோதரனாய் நான், நண்பர்களாய் பலர் என எல்லோரும் உங்களோடு என்றும் இருக்கிறோம். எல்லாம் உங்களுக்கு கிடைத்து அமைதியான, அழகான வாழ்வு கிடைத்திட எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்.

அண்ணன்,
பிரபாகர்.

8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

ம்ம்.

Unknown said...

What happened? Hope everything is ok.

Palveru mugabhavangala avanga ezhuthil theriyum.

Vaazhkkail vazhvatharke. Pathivulagamum athu maathiri thaan.

அது சரி(18185106603874041862) said...

ம்ம். இதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை அண்ணா.

sathishsangkavi.blogspot.com said...

என்னாச்சு பங்காளி...

Thekkikattan|தெகா said...

what happened...?!!

settaikkaran said...

ஹும், நானும் அந்த இடுகையை வாசித்தேன். வருத்தமான தகவல் நண்பரே!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

indha chinna vayadhil evallavu arivu
avar meendum meendu varuvaar enru numbugireen

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB