மின்னல் வேக பதிவர்கள் சந்திப்பு...

|

மின்னல் வேகத்தில் அடித்தான், மின்னல் வேகத்தில் பறந்து ட்ரெயினை பிடித்தான் (சத்தியமா குருவிய சொல்லலைங்க) என படித்து மட்டும் இருந்த நான் இன்றுதான் அனுபவத்தில் பார்த்தேன்.


போனில் மட்டும் பேசிக்கொண்டிருந்த அன்பு நண்பர் ரோஸ்விக் (நண்பர் என்பதைவிட தம்பி என்றால் இன்னும் நிறைய சந்தோஷப்படுவார். அண்ணா என அவர் அழைக்கும் போது நிஜமாய் சிலிர்ப்பாய் இருக்கும்) நேரில் பார்க்கும் வாய்ப்பாக என்னை ஒரு பதிவர் சந்திப்புக்கு அழைக்க வருவதாய் சொல்லி கேமராவை தயார்ப்படுத்தி ஆயத்தமாய் இருக்க, மற்றுமோர் அவசர அழைப்பு இங்கு வேலை பார்க்கும் அன்பு நண்பரிடமிருந்து.

நான்கு மாதங்களுக்கு முன் தொலைந்துபோன அவரது பணம் சம்மந்தமாய் போலீஸை பார்க்கச் செல்ல என்னையும் அவர்களிடம் பேசுவதற்காக அழைக்க சென்றாக வேண்டிய கட்டாயம். நான்கு மணி நேரம் திணற திணற அதிகமாய் வைத்திருந்த ஏஸியில் ஏறக்குறைய நடுங்கிய வண்ணம் புகார் மற்றும் விளக்கம் கொடுத்துவிட்டு வர, தூங்க செல்ல நிறைய தாமதம் ஆனதால், என்னால் காலையில் சரியான நேரத்துக்கு அவர்களுடன் செல்ல இயலவில்லை...

காலையில் தம்பி அழைத்தவுடன், நிலமையை சொல்லி, இறுதியில் சந்திப்பதாய் மீண்டும் ஒரு வாக்கு கொடுத்து சொன்ன நேரத்தில் அங்கிருந்தோம். அவர்களின் காலாறலின் முடிவு எங்களுக்கு ஆரம்பமாக இருக்க, அவர்களை சந்தித்து பேசியது மொத்தம் பதினைந்து நிமிடம் மட்டுமே... அதனால் தான் இடுகையின் தலைப்பில் மின்னல்...

சிறிது தான் பேசினோம், அவர்களுக்கோ நிறைய நடந்த களைப்பு, கடும் பசி. களைப்பிலும் களிப்பாய் இருந்தார்கள் அல்லது இருக்க முயற்சித்தார்கள்சந்தித்த களிப்பில் புகைப்படம் எடுத்துக்கொண்டு மறுபடியும் வெகு விரைவில் சந்திப்போம் என உறுதியெடுத்து பிரிந்து செல்ல, கொண்டு சென்ற பாவத்திற்காய் இன்னும் சில புகைப்படங்களை எடுத்து வீடு திரும்பினோம். இதோ அவைகள் வரிசையாய் கீழே...




வெளியில் இருந்த ஒர் பலகை...



சந்தித்த நாங்கள்...



ஏரியின் முகப்பில்...



மழையில் நனைந்த....



இடது புறம் இவ்வாறுதான்...



முன்புறத்தில் பார்த்தது...




வலது புறத்தில்...

51 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Prathap Kumar S. said...

எந்த ஊர்...சிங்கப்பூர்

Cable சங்கர் said...

பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்.. சீக்கிரம் டிக்கெட்ட போட வச்சிருவீங்க போலருக்கே

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
எந்த ஊர்...சிங்கப்பூர்
//
வாங்க பிரதாப்... பிரதாபம்.

//
Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்.. சீக்கிரம் டிக்கெட்ட போட வச்சிருவீங்க போலருக்கே
//
அண்ணே சத்தியமா நீங்க யூத்துதான் ஆனாலும் என்னை அண்ணன்னு அழைக்கிறது... உங்க வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
December 13, 2009 8:22 PM

ஈரோடு கதிர் said...

//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!

vasu balaji said...

//ஈரோடு கதிர் said...

//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!//

ரிபீட்டுக்கு ரிபீட்ட்ட்ட்டேஏஏஏஏய்

ரோஸ்விக் said...

அட இவ்வளவு சூடாவா? அருமை அண்ணா. :-)

நாடோடி இலக்கியன் said...

சந்திச்சவங்க வீட்டுக்கு போய் சேர்வதற்குள் ஒரு இடுகையா?

மின்னலேதான்.

புகைப்படங்கள் அருமை.

Prathap Kumar S. said...

ஹஹஹ சேகர் அண்ணே, கதிர் அண்ணே சொன்னதையெல்லாம் ஏதோ ஆசைப்படறாங்கன்னு ஒத்துக்கலாம்...ஆனா வானம்பாடிகள் அய்யாவுக்கு இம்புட்டு ஆகாது... ஆசை யாரைவிட்டுச்ச...நான் கிளம்புறேன் இல்லன்னா என்னையும் அண்ணேன்னு சொல்லிறப்போறாங்க...எஸ்கேகககககககககககப்.

Ganesan said...

சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புகைப்படங்களும்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

ஜெகதீசன் said...

அட இவ்வளவு சூடாவா? அருமை அண்ணா. :-)

அப்பாவி முரு said...

இன்னிக்கி எனக்கு வேலை வைத்து, உலாவில் கலந்துகொள்ள முடியாது செய்த என்னதிகாரி மட்டும் என்னிடம் கிடைத்தால்.....

(படமெல்லாம் போறாமைப்பட வைக்குது)

ஆ.ஞானசேகரன் said...

ஹ்ய்ய்ய்ய் அருமையான சந்திப்பா இருக்கே! பாராட்டுகள்,.. படங்கள் மிக அருமை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

காமிரா கவிஞர்களின் கவித் திறமை மெய் மறக்க வைக்கிறது!

எங்கே பாரதி என்ற கவிஞனைக் காணோம்!?

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணா,
மின்னல் வேக பதிவுக்கு மிக்க நன்றி.
கடுமையான பசியால் உங்களோடு அதிக நேரம் செலவழிக்க இயலாமல் போயிருச்சு. விரைவில் மீண்டும் சந்திப்போம்.
புகைப்படங்கள் மிக அருமை.

செ.சரவணக்குமார் said...

புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

ஆரூரன் விசுவநாதன் said...

அருமையான புகைப் படங்கள் பிரபா....

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

கலக்கல். நான் தவறவிட்ட நிகழ்வு !
:(

Starjan (ஸ்டார்ஜன்) said...

புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

கிரி said...

வெற்றிகரமாக சென்று வந்து விட்டீர்களா! :-)

கலகலப்ரியா said...

புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா..! வளரட்டும் உங்கள் புகைப்படப் பணி..!

வெற்றி-[க்]-கதிரவன் said...

tooooooooooooooo fast -:)))

அறிவிலி said...

அடடே... ஒரு நல்ல சந்திப்புக்கு வர முடியாம போச்சே.இத்தனை வேகமா???

Thamira said...

பூக்கள் மற்றும் லாண்ட்ஸ்கேப் படங்கள் மிகவும் அழகு. பதிவர்கள் படம்.. ஹிஹி என் பொட்டியில் லோட் ஆகவில்லை.!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
அட இவ்வளவு சூடாவா? அருமை அண்ணா. :-)
//
நாங்க சாப்பிட்டுல்ல தெம்பா வந்தோம். அதான் வீட்டுக்கு வந்த உடனே...

// நாடோடி இலக்கியன் said...
சந்திச்சவங்க வீட்டுக்கு போய் சேர்வதற்குள் ஒரு இடுகையா?

மின்னலேதான்.

புகைப்படங்கள் அருமை.

பிரபாகர் said...

//
தலைப்பு வெச்சிட்டு அத பின்பற்றனுமில்ல, அதான் நண்பா...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ சேகர் அண்ணே, கதிர் அண்ணே சொன்னதையெல்லாம் ஏதோ ஆசைப்படறாங்கன்னு ஒத்துக்கலாம்...ஆனா வானம்பாடிகள் அய்யாவுக்கு இம்புட்டு ஆகாது... ஆசை யாரைவிட்டுச்ச...நான் கிளம்புறேன் இல்லன்னா என்னையும் அண்ணேன்னு சொல்லிறப்போறாங்க...எஸ்கேகககககககககககப்.
//
நினைச்சத சொல்லிட்டீங்க பிரதாப்...

//
KaveriGanesh said...
சாரு நிவேதிதாவின் 10 புத்தகங்களின் வெளியீடும், புகைப்படங்களும்

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html
//
நல்ல தகவல்...

பிரபாகர் said...

//
ஜெகதீசன் said...
அட இவ்வளவு சூடாவா? அருமை அண்ணா. :-)
//
ஆமாம் தம்பி,உங்களுடன் நிறைய பேச வேண்டும் அடுத்த சந்திப்பில்...

//
அப்பாவி முரு said...
இன்னிக்கி எனக்கு வேலை வைத்து, உலாவில் கலந்துகொள்ள முடியாது செய்த என்னதிகாரி மட்டும் என்னிடம் கிடைத்தால்.....

(படமெல்லாம் போறாமைப்பட வைக்குது)
//
ஆமாங்க, நானும் நீங்க இடுப்பீங்கன்னு வந்தேன். சந்திக்கனும் அவசியம்...
நிறைய எடுப்போம் சந்திக்கும் போது, கூல்...

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
ஹ்ய்ய்ய்ய் அருமையான சந்திப்பா இருக்கே! பாராட்டுகள்,.. படங்கள் மிக அருமை
//
நாமும் சந்திக்கனும் நண்பரே! ஆவலாயிருக்கிறேன்...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அருமை!

காமிரா கவிஞர்களின் கவித் திறமை மெய் மறக்க வைக்கிறது!

எங்கே பாரதி என்ற கவிஞனைக் காணோம்!?
//
மின்னலால் மறைந்திருக்கலாம். உறுதியாய் விரைவில்... நன்றிங்க...

பிரபாகர் said...

//
ஜோசப் பால்ராஜ் said...
அண்ணா,
மின்னல் வேக பதிவுக்கு மிக்க நன்றி.
கடுமையான பசியால் உங்களோடு அதிக நேரம் செலவழிக்க இயலாமல் போயிருச்சு. விரைவில் மீண்டும் சந்திப்போம்.
புகைப்படங்கள் மிக அருமை.
//
நன்றி. அடுத்த முறை நோ எக்ஸ்யூஸ்... நிறைய பேச வேண்டும்...

//
செ.சரவணக்குமார் said...
புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.
//
நன்றிங்க. ரொம்ப சந்தோஷம்...

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமையான புகைப் படங்கள் பிரபா....

வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன்... ஊரில் எடுத்திடுவோம்...

//
கோவி.கண்ணன் said...
கலக்கல். நான் தவறவிட்ட நிகழ்வு !
:(
//
கண்டிப்பாய் பார்க்க வேண்டும், ஆயிரம் கண்டிட்ட என் அன்பு அண்ணனை...

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமை.
//
நன்றி நண்பா, ஊக்கத்திற்கும், பாராட்டிற்கும்...

//
கிரி said...
வெற்றிகரமாக சென்று வந்து விட்டீர்களா! :-)
//

கிரி வலம், கிரி இல்லாமல்... செல்வோம் வேறிடம் அடுத்த முறை கிரியோடு...

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
புகைப்படங்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா..! வளரட்டும் உங்கள் புகைப்படப் பணி..!
//
நன்றி சகோதரி... உங்களின் அன்பிற்கு.

//
[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...
tooooooooooooooo fast -:)))
//
minnal?

பூங்குன்றன்.வே said...

புகைப்படங்கள் கொள்ளை அழகு;
இந்த அளவு மின்னல் ஸ்பீட் இடுகை பிரமிக்கவைக்கிறது பிரபாகர் !!

பிரபாகர் said...

//
அறிவிலி said...
அடடே... ஒரு நல்ல சந்திப்புக்கு வர முடியாம போச்சே.இத்தனை வேகமா???
//
உங்களையும் அவசியம் பார்க்கனுங்க...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
பூக்கள் மற்றும் லாண்ட்ஸ்கேப் படங்கள் மிகவும் அழகு. பதிவர்கள் படம்.. ஹிஹி என் பொட்டியில் லோட் ஆகவில்லை.!
//
நன்றி ஆதி... அவசரத்தில் வந்த ஒரு மின்னல்...ரொம்ப சந்தோசம்...

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
புகைப்படங்கள் கொள்ளை அழகு;
இந்த அளவு மின்னல் ஸ்பீட் இடுகை பிரமிக்கவைக்கிறது பிரபாகர் !!
//
நன்றி பூங்குன்றன்... மிக்க மகிழ்ச்சி...

புலவன் புலிகேசி said...

தல படங்கள் மிக அருமை.....

சி தயாளன் said...

மின்னல் வேகம் தான்....வீட்ட வந்து பார்த்தால் பதிவு காத்திருக்குது....

அடிக்கடி சந்திப்பம்... :-)

புகைப்படங்கள் அருமை...நம் குழுமத்தில் இன்னொரு கமெரா கவிஞர் :-)

மணிஜி said...

சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்

ஈரோடு கதிர் said...

வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....

butterfly Surya said...

சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்//////

மணிஜீ.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..முடிந்தால் உங்க வண்டியிலேயே போயிடலாம்.

நன்றி பிராபா. படங்கள் அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்க இடுகையிலும் நல்ல வேகம் பிரபாகர்.

புகைப்படங்கள் மிக அருமை :))

vasu balaji said...

//ஈரோடு கதிர் said...

வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....//

அதானே! அது வேற ஒன்னுமில்ல. நாம அங்க போனா இவிங்க யூத்துன்னு அங்க போட்டுட்ருக்கறா சீனு புட்டுக்கும்னு பயம். நீங்க வாங்க நாம போய் டரியலாக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் இடபுறமும், வலது புறமும் ஒரே மாதிரி இருக்கே எப்படி கொஞ்சம் கவணிங்கள் பிரபாகர்

Anonymous said...

படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
தல படங்கள் மிக அருமை.....
//
நன்றி புலிகேசி...

//
’டொன்’ லீ said...
மின்னல் வேகம் தான்....வீட்ட வந்து பார்த்தால் பதிவு காத்திருக்குது....

அடிக்கடி சந்திப்பம்... :-)
புகைப்படங்கள் அருமை...நம் குழுமத்தில் இன்னொரு கமெரா கவிஞர் :-)
//
நன்றி நண்பா... நிறைய பேசுவோம் அடுத்த சந்திப்பில்...

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்
//
வாங்கண்ணே, ஆவலாய் காத்திருக்கேன்...

//
ஈரோடு கதிர் said...
வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....
//
வணக்கம் கதிர்! மனசால யூத்துதான்! நேர்ல பாருங்க, உண்மை தெரியும்...

பிரபாகர் said...

//
butterfly Surya said...
சீக்கிரமே சிங்கப்பூர் டிரிப்//////

மணிஜீ.. சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..முடிந்தால் உங்க வண்டியிலேயே போயிடலாம்.

நன்றி பிராபா. படங்கள் அருமை.
//
வாங்க சூர்யா, மும்மூர்த்திகளுக்காக காத்திருக்கேன்.

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
உங்க இடுகையிலும் நல்ல வேகம் பிரபாகர்.

புகைப்படங்கள் மிக அருமை :))
//
நன்றி செந்தில்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said...

வானம்பாடியண்ணே.... யூத்து நம்ம ரெண்டு பேருக்கும் அண்ணன் பிரபாகர் நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சொல்லலைங்கோ.....//

அதானே! அது வேற ஒன்னுமில்ல. நாம அங்க போனா இவிங்க யூத்துன்னு அங்க போட்டுட்ருக்கறா சீனு புட்டுக்கும்னு பயம். நீங்க வாங்க நாம போய் டரியலாக்கலாம்.
//
அய்யா, வாங்கய்யா! வருகை என் பாக்கியம்.

//
ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் இடபுறமும், வலது புறமும் ஒரே மாதிரி இருக்கே எப்படி கொஞ்சம் கவணிங்கள் பிரபாகர்
//
கவனித்தாயிற்று, சரியான கவனித்தல் நண்பரே!

//
சின்ன அம்மிணி said...
படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு
//

நன்றிங்க சின்ன அம்மிணி...

முகவை மைந்தன் said...

இவ்வளவு விரைவா இடுகையும், பின்னூட்டங்களும். படங்கள் அருமை. இரண்டாவது காரிக்கிழமை நடை வழிகாட்டி இருக்குதா? நல்லது. நான் விரைவாக தூங்கிட்டதால தான் இவ்வளவு மெல்லமா பின்னூட்டமிடுறேன்னு...... கி கி கி கி

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said..
//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!//
ரிபீட்டுக்கு ரிபீட்ட்ட்ட்டேஏஏஏஏய்//

என்னமா பின்னூட்டம் போடுறாங்கப்பா...இது ரிப்பீட்டா அப்பீட்டா????

மிகவும் இனிமையான நிகழ்வு, அனுபவம்...

தமிழ் said...

ப‌ட‌ங்க‌ள் அத்த‌னையும் அருமை

அடிக்க‌டி நான் சென்று வ‌ரும் இட‌ம்

ம‌ல‌ரும் நினைவுக‌ளாய் தங்க‌ளின் இடுகை

பிரபாகர் said...

//
முகவை மைந்தன் said...
இவ்வளவு விரைவா இடுகையும், பின்னூட்டங்களும். படங்கள் அருமை. இரண்டாவது காரிக்கிழமை நடை வழிகாட்டி இருக்குதா? நல்லது. நான் விரைவாக தூங்கிட்டதால தான் இவ்வளவு மெல்லமா பின்னூட்டமிடுறேன்னு...... கி கி கி கி
//
நன்றிங்க... ரொம்ப சந்தோஷம்...

//
க.பாலாசி said...
//வானம்பாடிகள் said...
//ஈரோடு கதிர் said..
//Cable Sankar said...
பிரபாகர் அண்ணே அருமையான படங்கள்..//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!//
ரிபீட்டுக்கு ரிபீட்ட்ட்ட்டேஏஏஏஏய்//

என்னமா பின்னூட்டம் போடுறாங்கப்பா...இது ரிப்பீட்டா அப்பீட்டா????

மிகவும் இனிமையான நிகழ்வு, அனுபவம்...
//
நன்றி என் அன்பு பாலாசி...

//
திகழ் said...
ப‌ட‌ங்க‌ள் அத்த‌னையும் அருமை

அடிக்க‌டி நான் சென்று வ‌ரும் இட‌ம்

ம‌ல‌ரும் நினைவுக‌ளாய் தங்க‌ளின் இடுகை
//
நன்றி திகழ்... முதல் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB