எனக்கே தெரியாது

|

பத்தாவது படிச்சிட்டிருந்தேன். மூனாவது ரேங்க் தான் எப்பவும். வேலு ஃபர்ஸ்ட், முருகன் செகண்ட்.

அறிவியல் பாடத்தை எடுக்கிற சாரை, 'சைன்ஸ் அய்யா' ன்னு தான் கூப்பிடுவோம்.

நல்லா கிளாஸ் எடுப்பாரு. கேள்வி நிறைய கேப்பாரு. பதில் சொல்லலைன்னா குச்சில பின்னுவாரு.

நல்லா படிக்கிற பசங்க மேல ரொம்ப பாசமா இருப்பாரு.

வெளியூர்ல இருந்து வேலை பாத்ததினால தனியா வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தாரு. குடும்பம் பத்தின விவரங்கள் எங்களுக்கு தெரியாது.

குளிக்க போகும்போது அவரோட கூட்டிட்டு போவாரு. சுத்தமா துவைச்சி நீலம் போட்டு கிளீனா வெச்சுக்குவாரு.

எண்ணை போட்டு மீசையை நல்ல தடவி கொடுப்பாரு.

அன்னிக்கும் வழக்கம்போல் நேத்தி நடத்துன பாடத்துல இருந்து கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு.

அவரு கிளாஸ்னா ரொம்ப ஆர்வமா கவனிப்பேன். எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் பதில் சொல்லிவிடுவேன்.

வேலுவும் முருகனும் நன்றாக படித்து முதல் இரு இடங்களை பிடித்தாலும், நடத்தும் போது கவனிப்பது, பதில் சொல்லுவதில் நான் தான் ஃபர்ஸ்ட்.

வழக்கம்போல் கேள்வி கேட்க ஆரம்பிச்சார். பாப்பாத்தி, செந்தாமரை, கனகவள்ளின்னு பொண்ணுங்க பக்கத்துல இருந்து ஆரம்பிச்சது.

யாரும் சொல்லல. அப்புறம் சுப்பு, அழகு, வெங்கி... வேலு, முருகன்னு வந்துச்சி, யாருக்கும் ஆன்ஸர் தெரியல.

கடைசியா என்ன கேட்டார்.

கெத்தா, 'ஐயா எனக்கே தெரியாது'ன்னேன்.

பொசுக்குனு அவருக்கு கோவம் வந்துடுச்சி.

'நீ என்ன பெரிய புடுங்கியா, எனக்கே தெரியாதுன்னு சொல்றே'ன்னாரு.

ஊசி குத்துன பலூன் மாதிரி ஆயிட்டேன், அவமானமா போயிடுச்சி.

அப்புறம் அதிகமா பேச மாட்டேன்.

பப்ளிக் எக்ஸாம் பக்கத்து ஊர்ல ஹையர் செகண்டரி ஸ்கூல போய் தான் எழுதனும்.

கடைசிக்கு மொதலா சைன்ஸ் எக்ஸாம். நல்ல பண்ணினோம். முடிச்சிட்டு பஸ்ஸில வந்து இறங்கினோம்.

பஸ் ஸ்டாப்பிலேயே சைன்ஸ் ஐயா உட்காந்திருந்தாரு.

'பசங்களா எபபடி எழுதினீங்க'ன்னாரு.

எல்லாரும் சூப்பர்னு சொன்னாங்க.

என்ன பாத்தாரு. 'எப்படிடா பண்ணிருக்கே'ன்னாரு.

'சுமாரா பண்ணிருக்கேன் ஐயா' ன்னேன்.

கொஞ்சம் அதிர்ச்சியாகி,

'டேய் உன்னத்தான்டா மலை மாதிரி நம்பிருந்தேன், என் பேப்பர்ல ஃபஸ்ட் எடுப்பன்னு, சரி ஒரு மார்க்ல எத்தனை ரைட்?' ன்னாரு.

'நாப்பதுக்கு முப்பத்தொம்போது ரைட்' ன்னேன்.

'சரி, ரெண்டு மார்க்ல?'

'பதிமூனு சரி, ரெண்டு கதை விட்டிருக்கேன்'.

பதிமூனு ரெண்டு இருவத்தாறு, சரி அஞ்சி மார்க்?

நாலு சரி, ஒன்னு முடிக்கல, டைம் பத்தல'ன்னேன்.

கணக்கு பண்ணி 'தொண்ணுறு வரும் போல இருக்கேன்' னாரு.

நமட்டு சிரிப்பா அவர குறு குறுன்னு பாத்தேன்.

வேலு, 'சூப்பரா எழுதியிருக்காய்யா, அவந்தான் ஃபஸ்ட் வருவான்'ன்னான்.

'டேய் பையா, எனக்கு இப்பதான் புரியுது, அன்னிக்கி கிளாஸ்ல சொன்னத ஞாபகம் வெச்சிருக்கியா? வாழ்க்கையில எனக்கேன்னுனு எப்பவுமே ஏகாரத்தோட பேசக்கூடாது, உன் நல்லதுக்குதான் சொன்னேன்' னாரு.

இன்னிக்கும் நான் எனக்கேன்னு சொல்லமாட்டேன்.

யாராவது நெருக்கமானவங்க அப்படி சொன்னா கமென்ட் பண்ணியும், தெரியாதாவங்க சொன்னா மனசுக்குள்ளயே விமர்சிச்சிட்டு சைன்ஸ் ஐயாவை நினைச்சுக்குவேன்.

4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

உஷாரா ரிசல்டை சொல்லல?

பிரபாகர் said...

//உஷாரா ரிசல்டை சொல்லல?//

வாழவந்தான்,

நன்றி. நிஜமா ஃபர்ஸ்ட் மார்க், 85. அப்போது அது நல்ல மார்க்(86-ல்).

பிரபாகர்.

நையாண்டி நைனா said...

இதை நீங்க கதைன்னு போடாட்டாலும் எங்களுக்கு தெரியும் இது கதைதான் என்று.

பிரபாகர் said...

சத்தியமா பத்தாவுதுல நல்லா படிச்சேன் நைனா... நம்புங்க ப்ளீஸ்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB