காலேஜ் முடிச்சிட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேல பாத்துட்டிருந்தேன்.
சுரேஷ் என்ன பாக்க வந்தான்.
கிளாச பாதியில நிப்பாட்டிட்டு வெளியே வந்து 'என்னடா விஷயம்' னேன்.
ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டான்.
அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். +2 முடிச்சிட்டு பஸ்ல கிளீனரா ஓடிட்டு இருந்தான். என்மேல பாசமா இருப்பான்.
எந்த விஷயம்னாலும் என்கிட்டதான் சொல்லுவான்.(நல்லதுன்னா உடனே, கெட்டதுன்னா கொஞ்சம் லேட்டா)
தயங்கி, தயங்கி 'அண்ணா நான் லவ் பண்றேன், நீங்கதான் அத கன்பார்ம் பண்ணனும்'னான்.
லவ் பண்றாங்கறதே அதிர்ச்சி, அவன் குடும்பம் இருக்கிற சூழ் நிலையில. நான் வேற அதுல சம்மந்தப்படனும்ங்கறது பேரதிர்ச்சியா இருந்துச்சி.
உள்ள போயி, ஒரு ப்ரொக்ராம் பண்ண சொல்லிட்டு,
'ம், சொல்லுன்னேன்'.
'இத்தன நாளா உங்கிட்ட சொல்லாததுக்கு சாரிண்ணா. ஸ்கூல்ல +2 படிக்குது, தினமும் எங்க பஸ்ஸில தான் வரும். ஒரு மாசமா பாத்துகிட்டிருக்கேன்.
குடும்பம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்தாத. அடுத்த மாசம் பை குடுத்துடுவாங்க(கண்டக்டர்). 5.10 க்கு ஸ்கூல் விட்டு வரும். நீங்க சேலம் பஸ் நிக்கிற இடத்துல நில்லுங்க, நான் காமிக்கிறேன், நீங்க பாத்துட்டு ஓ.கே சொல்லறதுலதான் என் வாழ்க்கையே இருக்கு'ன்னான்.
'சரியில்ல, வேணாம்னு சொல்லிட்டா' நான்.
'சத்தியமா நேர்ல பாத்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்டீங்க'.
அரை மனசா ஒத்துட்டேன். அஞ்சு மணிக்கு வந்து கூட்டிட்டு போறேன்னான்.
கடைகிட்ட நின்னுட்டிருந்தேன், பக்கத்துல சுரேஷ்.
ஸ்கூல் விட்டு வரிசை வரிசையாய் பொண்ணுங்க வந்துட்டிருந்தாங்க.
'அண்ணா ரெண்டாவதா அந்த குரூப்ல வருது பாருங்க அதான்' ன்னான்.
பொண்ணு உண்மையிலெ ரொம்ப அழகா இருந்துச்சி.
எங்களை தாண்டி போகும்போது அவனை ஓரக் கண்ணால பாத்துட்டு போச்சு.
'எப்படிண்ணா இருக்கு, என்ன லுக் உடுது பாத்தியா'
'நல்லாருக்கு சுரேஷ், ஆனா' ன்னு இழுத்தேன்.
'அது போதும்' னுட்டு,
நேரா தூரமா போயிட்டிருந்த அந்த பொண்ணுகிட்ட போனான். பாக்கெட்டில இருந்து லெட்டரை எடுத்து கையில கொடுத்தான்.
அப்போதான் அந்த விபரீதம் நடந்தது.
டக்குனு செருப்பை கழட்டி சப்பு சப்புன்னு அவன் தலையில, கன்னத்துல அடிக்க, பேயறைஞ்ச மாதிரி சிலையா அதிர்ச்சியில நின்னான்.
பெரிய களேபரமாயிடுச்சி. சனங்க சுரேஷ விடவும் அந்த பொண்ண அதிகமா திட்டினாங்க, ஒரு பொண்ணுக்கு அவ்வளவு திமிறான்னு.
அவனோட மத்த ஃபிரண்ட்ஸ் எல்லம் ஒன்னு சேர்ந்து அவனை அந்த பக்கமா இழுத்துட்டு போயிட்டாங்க. நான் வேகமா கிட்ட ஓடினேன்.
ரவி 'அண்ணா நீங்க இங்க வரவேண்டாம், நாங்க பாத்துக்கறோம், நீங்க சென்டருக்கு போங்க' ன்னான்.
மனசு சரியில்லை. சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
சுரேஷோட அம்மா வந்து எங்க வீட்டுல புலம்பிக்கிடிருந்தது. அத சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுச்சி.
சுரேஷ ஆளயே காணும். நானும் கேட்கலை.
ரெண்டு நாள் கழிச்சி கிளாஸ் எடுத்துக்கிட்டிருக்க்கும்போது யாரொ ஒரு பொண்ணு என்னை பாக்க வந்திருக்கிறதா சொல்லி கூப்பிட குழப்பத்தோடு வெளியே போனேன்.
அங்க அந்த போண்ணு ரெண்டு மூனு ஃபிரண்ட்ஸோட இருந்தது.
சல்லுனு கோபம் வந்துச்சி.
'எதுக்கு வந்தே? அவன் உயிரோட இருக்கிறானான்னு கேட்டுட்டு போக வந்தியா'?
'அய்யோ அண்ணா நீங்களும் என்னை திட்டாதீங்கண்ணா, இந்த பாவி தெரியாம பண்ணிபுட்டேன், அவரு ரொம்ப நல்லவருன்னு தெரியாம போச்சு. அடிச்சதுக்கு பரிகாரமா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன், நீங்கதான் நல்லபடியா முடிச்சு வெக்கனும்னுச்சி.
கண்ணுல மாலை மாலையா தண்ணி.
எனக்கு ஒண்ணும் புரியல. 'சரிம்மா, அவன் எங்க போனான்னே தெரியல, ரெண்டு நாளா தகவல் இல்ல, உசுரோட இருக்கானான்னே தெரியல' ங்கவும், மீண்டும் அழ ஆரம்பிச்சது.
'சரி சரி, அவன் வந்தவுடன் பேசறேன்' னு சொல்லி சமாதானம் பண்ணி அனுப்பி வெச்சேன்.
கொஞ்ச நேரத்துல ஃபோன் வந்தது.
'அண்ணா வந்து உங்கள பாத்துச்சான்னா' சுரேஷ்.
'டேய், எங்கடா இருக்கே? என்ன ஒரு தகவலும் இல்ல?'
'என்ன சொல்லிச்சின்னு மொதல்ல சொல்லு' ன்னான்.
சொன்னதும், 'அதுக்காகத்தான் ரெண்டு நாளா தலைமறைவா இருக்கேன் உடனே வர்ரேன்' னான்.
அப்புறம் அந்த பொண்ணு வீட்ட விட்டு ஓடிவந்து கல்யாணம் ஆகி இப்போ ரெண்டு குழந்தைங்க, சந்தோஷமா இருக்காங்க.
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்.
சிரிக்கும் வெக்கத்தோட 'போங்கண்ணா' ன்னு சிணுங்கிகிட்டு...
செருப்படி
வகை : அனுபவம்... | author: பிரபாகர்Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
8 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
பிரபா, சும்மா பின்னுகிறீர்கள்.
வாழ்த்துகள்.
தேங்க்ஸ் சூர்யா...
எல்லாம் உங்களின் அன்பும் ஆதரவினால் தான்.
பிரபாகர்.
The flow of the the prose is excellent. Keep it up.
//The flow of the the prose is excellent. Keep it up.//
Thanks for your comments.
Prabhagar...
இன்னிக்கும் நான் அந்த பொண்ணை பாத்தா டக்குனு அது காலை பாப்பேன்....
hahhahahahaha
நன்றி அனானி...
good one!!
//vHari Rajagopalan said...
good one!!//
Welcome rajakopalan. கருத்துக்கும் வருகைகும் நன்றி...
Post a Comment