கேள்வி? பதில்...

|

நண்பர் அனுப்பிய கேள்விகளை பின்னூட்டமாக பதிலலித்திருந்தேன். இதோ தனி பதிவாய்....

நண்பா,உங்களின் பின்னூட்டத்திற்கு பதிலாக எனது சுய சரிதையையே எழுத வேண்டும் போல் இருக்கிறது


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என் அன்பு மனைவி அபியுடன் சேர்ந்த எனது பெயர்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

மனைவி இறந்த டிசம்பர் 17 2008 லிருந்து இன்று வரை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சத்தியமாய் இல்லை. கணிப்பொறியிலேலே எழுதுவதால் பேனாவும் பேப்பரும், அதை பார்ப்பரும் தப்பித்தார்கள்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

சாதம் கொஞ்சம், காய்கறிகள் அதிகமாய் இங்கு சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடன் வைத்தாலும் தொடர்வது வெகு சிலரோடுதான்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?.

ஆற்றில் கிணற்றில்... கடலென்றால் ரொம்ப பயம்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

சத்தியமாய் கண்களை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது, பிடிக்காதது இரண்டும் - நிறைய பேசுவது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஆறு வருட வசந்ததையும் இரு செல்வங்களையும், வாழ்வில் உயர்வையும் தந்தது என்னை தவிக்கவிட்டு போனது

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

எனது அருமை மனைவி

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கறுப்பு கலரில் அரைக்கால் சட்டை மட்டும்

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எனது மகன் செய்யும் குறும்புகள், மெலிதாய் இளையராஜா

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளிர் நீலம்

14. பிடித்த மணம்?

நறுமணம்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கிருஷ்ணா. அவரின் அசாத்திய துணிச்சல், தவறுகளை கூட சரியென சாதிக்கும் மனத்துணிவு

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அவரின் பதிவு

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

வெயிலுக்காகவும், கணணியில் நெடு நேரம் வேலை செய்யும் போதும், கண்களை பாதுகாக்க.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எனது திரையுலக நண்பன் பரிந்துரைக்கும் எந்த படமும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

பட்டாளம்(டி.வி.டி.யில்)

21. பிடித்த பருவ காலம் எது?

வாழ்க்கையில் வாலிபம், நிகழ்வில் குளிர்

22) என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

பொன்னியின் செல்வன், எத்தனையாவது தடவை என ஞாபகம் இல்லை.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அடிக்கடி. ஆனல் கடந்த 6 மாதங்களாய் எனது மனைவி மற்றும் மகன்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

சிரிப்பு, அழுகை

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?.

சிங்கப்பூர்

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சொல்லும்படியாக இல்லை, வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனைவி என்னை விட்டு பிரிந்தது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எல்லா இடமும், மனதிற்கு பிடித்த நண்பர்களுடன்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

சந்தோசப்படுத்தி, சந்தோஷமாய்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

காதலியை(காதலனை) பார்க்க நினைப்பது(இருந்தால்)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வார்த்தையில், 'வாழ்வதற்கே'

1 Comentário:

ஜோசப் பால்ராஜ் said...

வரும் சனிக்கிழமை சந்திப்பில் கட்டாயம் சந்திப்போம். மறக்காமல் வந்துருங்க. என் அலைபேசி எண் 93372775.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB